தங்கத்தின் மீதான கலால் வரியை நீக்க அரசு தயார்!- பிரணாப்

மத்திய அரசு 2012- ம் ஆண்டு பட்ஜெட்டில் தங்கத்தின் மீதான கலால் வரியை உயர்த்தி இருந்தது.
இந்த நிலையில், நேற்று பாராளுமன்றத்தில் பட்ஜெட் மீதான விவாதத்தின் போது பேசிய பா.ஜ.கட்சியைச் சேர்ந்த முன்னாள் நிதி மந்திரி யஷ்வந்த் சிங் மற்றும் எம்.பி.க்கள், தங்கத்தின் மீதான வரியை திரும்பப்பெற வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
அப்போது, அதற்கு பதில் அளித்து பேசிய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, "தங்க நகை சிறு வியாபாரிகள் மீது வரியை சுமத்தி பாதிப்புக்குள்ளாக்குவது எனது நோக்கமல்ல. மேலும், இந்த வியாபாரிகள் மீது அந்தந்த மாநில அரசுகள் வாட் வரி விதிக்கின்றன.
மேலும், நம் நாட்டில் அதிகளவு தங்கம் இறக்குமதி செய்யப் படுவதால், தங்கத்தின் மீது உயர்த்தி விதிக்கப்பட்ட சுங்கவரியை ரத்து செய்ய முடியாது.
ஆனால் மத்திய அரசு தங்கத்தின் மீது விதித்த 1 சதவீதம் வரியை வேண்டுமானால் திரும்பப்பெற தயாராக இருக்கிறது," என்றார்.
அரசின் இந்த முடிவுக்கு எதிர்க்கட்சிகள் வரவேற்பு தெரிவித்துள்ளன.












Click it and Unblock the Notifications