ஐ.நா. மனித உரிமை பேரவை தீர்மானம்: ஐரோப்பிய நாடுகளில் தூதரகங்களை மூடுகிறது இலங்கை
கொழும்பு: ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில் ஐரோப்பிய நாடுகளில் தூதரகங்களை மூடுவதற்கு அந்நாடு முடிவு செய்துள்ளது.
இலங்கையில் நடந்த இறுதி கட்ட போரின்போது மனித உரிமைகள் மீறப்பட்டதாக ராணுவம் மீது புகார் கூறப்பட்டது. இது தொடர்பாக ஐ.நா. மனித உரிமை பேரவையில் அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றியது. தீர்மானத்துக்கு ஆதரவாக இந்தியா மற்றும் ஐரோப்பிய நாடுகள் வாக்களித்தன. இதனால் தீர்மானத்தின்போது தனக்கு எதிராக வாக்களித்த நாடுகளின் மீது இலங்கை கடும் கோபத்தில் உள்ளது.
இந்த நாடுகளின் மீது தனது எதிர்ப்பை காட்ட இலங்கை தீர்மானித்துள்ளது. அதன் எதிரொலியாக தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்த ஐரோப்பிய நாடுகளில் தூதரக அலுவலகத்தை மூட திட்டமிட்டுள்ளது.
அதே நேரத்தில் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்த ஆசிய மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் இலங்கையில் புதிய தூதரகங்கள் திறக்கப்படுகின்றன.
இதனிடையே தீர்மானத்துக்கு எதிராக இந்தியா தவிர பெரும்பாலான ஆசிய நாடுகள் வாக்களித்துள்ளன. இதன் மூலம் இலங்கையுடன் ஆசிய நாடுகள் வலுவான நட்புறவுடன் இருப்பதாக இலங்கை வெளியுறவு அமைச்சர் ஜி.எல். பீரிஸ் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications