புல்மேட்டில் 102 பக்தர்கள் பலியான விபத்திற்கு வனத்துறையின் அலட்சியமே காரணம்: விசாரணை கமிஷன் அறிக்கை
திருவனந்தபுரம்: சபரிமலை புல்மேட்டில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 102 ஐயப்ப பக்தர்கள் பலியான சம்பவத்திற்கு வனத்துறையின் அலட்சியம் தான் காரணம் என நீதிபதி ஹரிஹரன் நாயர் கமிஷன் தெரிவித்துள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் மகரவிளக்கு பூஜை மிகவும் பிரசித்தி பெற்றது. மகர விளக்கு பூஜை தினத்தன்று மாலையில் பொன்னம்பல மேட்டில் தெரியும் மகர ஜோதியை பார்ப்பதற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் குவிவார்கள். கடந்தாண்டு ஜனவரி 14ம் தேதி மகர ஜோதியை பார்த்துவிட்டுசபரிமலையில் உள்ள புல்மேடு பகுதியில் லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் குவிந்தனர்.
ஜோதியை பார்த்துவிட்டுத் திரும்பும்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 102 பக்தர்கள் பரிதாபமாக இறந்தனர். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் பற்றி விசாரணை நடத்த நீதிபதி ஹரிஹரன் தலைமையிலான விசாரணை கமிஷனை கேரள அரசு நியமித்தது. இந்த கமிஷன் சில மாதங்களுக்கு முன் இடைக்கால அறிக்கையை தாக்கல் செய்தது. அதில் எதிர்காலத்தில் இதுபோன்று விபத்து நடக்காமல் தடுப்பதற்கு 30க்கும் மேற்பட்ட அறிவுரைகளை வழங்கியது.
இந்நிலையில் கேரள அரசிடம் கமிஷனின் இறுதி அறிக்கை நேற்று சமர்ப்பிக்கப்பட்டது. அதில் வனத்துறையின் அலட்சியம் தான் விபத்துக்கு முக்கிய காரணம். ஜோதியை பார்ப்பதற்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்று தெரிந்தும் புல்மேட்டில் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை வனத்துறை செய்யவில்லை. நெரிசல் ஏற்பட இதுதான் முக்கிய காரணமாக அமைந்துவிட்டது. இனிமேல் இதுபோன்று விபத்து ஏற்படாமல் இருக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications