அண்ணா பல்கலைக்கழக விடுதியில் என்ஜினியரிங் மாணவர் தற்கொலை-சாவில் மர்மம்
சென்னை: சென்னை அண்ணா பல்கலைக்கழக விடுதியில் என்ஜினியர் மாணவர் ஒருவர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். மாணவனின் சாவில் மர்மம் இருப்பதாக அவரது தாய் தெரிவித்துள்ளார்.
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியை அடுத்த தேவராஜபாளையத்தை சேர்ந்தவர் மணிகண்டன்(24). சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் இ.சி.இ. பாடப்பிரிவில் 3ம் ஆண்டு படித்து வந்தார். பல்கலைக்கழக விடுதியில் உள்ள 19வது பிளாக்கில் தங்கி இருந்த மணிகண்டனின் அறை நேற்று உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது.
சகமாணவர்கள் கதவை தட்டியும் திறக்கவில்லை. இதனையடுத்து விடுதி வார்டனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பிறகு அறையின் கதவை உடைத்து பார்த்த போது, அறையில் இருந்த மின்விசிறியில் வேட்டி மூலம் தூக்கு போட்டு மணிகண்டன் தற்கொலை செய்து இறந்து கிடந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த கோட்டூர்புரம் இன்ஸ்பெக்டர் ஜெயசங்கர் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி, ராயப்பேட்டை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மணிவண்ணனின் தந்தை செல்வம் 2வது திருமணம் செய்து கொண்டு மனைவியிடம் இருந்து பிரிந்து சென்றுவிட்டார். அதன்பிறகு தாயார் காஞ்சனா தான் கூலி வேலை செய்து மணிவண்ணனை படிக்க வைத்தார். நன்றாக படித்த அவர் அண்ணா பல்கலையில் என்ஜினியரிங் படிப்பில் சேர்ந்தார். இந்த நிலையில் அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மணிகண்டன் தற்கொலை செய்து கொண்ட அறையில் இருந்து எந்த தடயமோ, கடிதமோ சிக்கவில்லை. இந்த நிலையில் தனது மகனின் சாவில் மர்மம் இருப்பதாக அவரது தாயார் காஞ்சனா கூறியுள்ளார். இதனால் போலீசார் மணிவண்ணனின் நண்பர்கள், வகுப்பு பேராசிரியர்கள் மற்றும் வார்டன் ஆகியோரிடம் தீவிர விசாரணை நடத்தினர்.
அப்போது மணிகண்டனின் காதலி அவரை ஏமாற்றிவிட்டதாக செல்போனில் மணிகண்டன் குரல் பதிவு செய்து உள்ளதாக தெரிவித்தனர். இதனால் மணிகண்டன் காதல் பிரச்சனையால் தற்கொலை செய்து கொண்டாரா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications