மலேசியாவில் இருந்து மிளகாய் பொடிக்குள் ரூ.25 லட்சம் போதைப் பொருள் கடத்தி வந்த பலே பெண்
திருச்சி: மலேசியாவில் இருந்து திருச்சி வந்த விமானத்தில் மிளகாய் பொடிக்குள் ரூ.25 லட்சம் மதிப்புள்ள போதைப் பொருளை மறைத்து வைத்து கடத்தி வந்த பெண்ணை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து புறப்பட்ட ஏர்- ஏசியா விமானம் ஒன்று திருச்சி விமான நிலையத்தில் நேற்று காலை 8.30 மணிக்கு தரையிறங்கியது. அப்போது அந்த விமானத்தில் போதைப் பொருள் கடத்தி வரப்படுவதாக சுங்கத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த விமானத்தில் வந்த ஒரு பார்சலை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் மிளகாய் பொடி, மஞ்சள் மற்றும் மல்லிப்பொடி பாக்கெட்டுகள் இருந்தன. அந்த பெட்டியை கீழே கொட்டிப்பார்த்தபோது அதில் வெள்ளை நிற பவுடர் உள்ள சின்ன, சின்ன பாக்கெட்டுகள் இருந்தன.
அந்த பவுடரை பரிசோதனை செய்து பார்த்தபோது அது எபிதெரின் என்னும் போதைப் பொருள் என்பது தெரியவந்தது. இதையடுத்து 5 கிலோ எடையுள்ள அந்த பவுடர் பாக்கெட்டுகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு ரூ.25 லட்சம் ஆகும்.
கோவையை சேர்ந்த ருக்மணி (51) என்பவரின் பெயருக்கு அந்த பார்சல் வந்திருந்தது. அதை எடுத்துச் செல்ல அவர் விமான நிலையத்திற்கு வந்திருந்ததை கண்டுபிடித்த அதிகாரிகள் அவரைப் பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில், அவர் கடந்த 19ம் தேதி திருச்சியில் இருந்து மலேசியா சென்றுவிட்டு 21ம் தேதி திரும்பி வந்ததும், அவர் திரும்பி வந்தபோது எடை அதிகமாக இருந்ததால் போதைப் பொருள் உள்ள பெட்டியை பார்சலில் அனுப்பி வைத்துவிட்டு வந்ததும் தெரிய வந்தது. இதையடு்தது ருக்மணியை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
ருக்மணிக்கும், போதைப் பொருள் கும்பலுக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications