இலங்கையில் இருந்து போட்டோ ஆல்பத்தில் வைத்து தங்கம் கடத்தியவர் சென்னையில் கைது
சென்னை: இலங்கையில் இருந்து சென்னைக்கு போட்டோ ஆல்பத்தில் மறைத்து வைத்து தங்கம் கடத்தியவரை போலீசார் கைது விசாரித்து வருகின்றனர்.
சென்னை விமான நிலையத்தில் நேற்று இலங்கை தலைநகர் கொழும்பில் வந்த விமானம் தரையிறங்கியது. இதில் பயணித்து வந்த பயணிகளை சுங்க இலாகா அதிகாரிகள் வழக்கமான சோதனைக்கு உட்படுத்தினர்.
அப்போது சென்னை மண்ணடியை சேர்ந்த முகமது ரிப்பாயா(50) என்பவர் மீது சுங்க இலாகா அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரது உடமைகளை அதிகாரிகள் சோதனையிட்டனர். இதில் குழந்தைகள் பயன்படுத்தும் ஸ்லேட், போட்டோ ஆல்பம் ஆகியவற்றின் உள்ளே இருந்த கம்பிகள் தங்கமாக இருந்தது.
மேலும் அவர் எடுத்து வந்த சூட்கேசின் கைப்பிடி தங்கத்தினால் செய்யப்பட்டிருந்தது தெரிய வந்தது. அவரது பொருட்களில் இருந்து 890 கிராம் தங்கம் இருந்தது. அவரது பொருட்களை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், முகமது ரிப்பாயாவை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications