இடிந்தகரைக்கு 12ம் தேதி வருகிறார் கேரளத்து அச்சுதானந்தன்!

Subscribe to Oneindia Tamil

Achuthananthan
கூடங்குளம்: சற்றும் தொய்வில்லாமல் நீண்டு கொண்டேயிருக்கும் கூடங்குளம் அணு மின் நிலைய எதிர்ப்புப் போராட்டத்திற்கு இப்போது ஆதரவு கோரி அண்டை அயலாரின் ஆதரவை நாட ஆரம்பித்துள்ளார் உதயக்குமார். சமீபத்தில் அன்னா குழுவைச் சேர்ந்த பிரஷாந்த் பூஷன் வந்து விட்டுப் போன நிலையில் தற்போது கேரளத்து அச்சுதானந்தனையும் அவர் இடிந்தகரைக்கு அழைத்துள்ளார்.

12ம் தேதி இடிந்தகரைக்கு அச்சுதானந்தன் வரவுள்ளாராம். கூடங்குளம் போராட்டத்திற்கும் அவர் ஆதரவு தெரிவித்துள்ளார்.

முன்னதாக இடிந்தகரைக்கு வருவதற்கு முன்பு கேரளா சென்று திருவனந்தபுரத்தில் அச்சுதானந்தனை பிரஷாந்த் பூஷன் சந்தித்துப் பேசினார். போராட்டக் குழுவினரை நீங்களும் நேரில் சந்திக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அதை அச்சுதானந்தன் ஏற்றுக் கொண்டார்.

அதன்படி வருகிற 12ம் தேதி இடிந்தகரைக்கு வருகிறாராம் அச்சுதானந்தன். அன்று போராட்டக் குழுவினரை சந்திக்கும் அவர், அவர்கள் மத்தியிலும் பேசவுள்ளாராம்.

இன்னும் யாரெல்லாம் வருவார்கள் என்பது தெரியவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+