கண்டக்டர் வேலைக்கு லஞ்சம் கேட்டதால் நேருவை மிரட்டியதாக பிடிபட்டவர்கள் வாக்குமூலம்!
சங்கரன்கோவில்: திமுக ஆட்சியின்போது கண்டக்டர் வேலைக்கு சேர்க்க லஞ்சம் கேட்டதால் முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக நெல்லை மற்றும் விருதுநகர் மாவட்டத்தில் சிக்கிய நான்கு பேரும் கூறியுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திமுக முன்னாள் அமைச்சர் கேஎன் நேருவின் தம்பி ராஜஜெயம் கடந்த 29ம் தேதி மர்ம நபர்களால் கடத்தி செல்லப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். தனிப்படைகள் அமைத்து போலீசார் கொலையாளிகளை தேடி வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் நேருவின் தில்லை நகர் அலுவலக தொலைபேசியில் தொடர்பு கொண்ட ஒரு மர்ம ஆசாமி அடுத்த குறி நேருவுக்குதான் என கூறிவிட்டு தொடர்பை துண்டித்தார். இதுகுறித்து திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் சைலேஸ்குமார் யாதவிடம் புகார் செய்யப்பட்டது.
தில்லை நகர் போலீசார் வழக்கு பதிந்து மர்ம ஆசாமியை தேடி வந்தனர். நேரு அலுவலகத்திற்கு எந்த தொலைபேசி எண்ணிலிருந்து அழைப்பு வந்தது என்பது குறித்து சைபர் கிரைம் போலீசார் ஆய்வு செய்தனர். இதில் தனியார் செல்போன் நிறுவனம் மூலம் கந்தசாமி என்பவர் பேசியிருப்பது தெரியவந்தது. தொடர்ந்து நடத்திய விசாரணையில் நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள பெரும்புத்தூர் கிராமத்தை சேர்ந்த ஒருவருக்கு இதில் தொடர்பிருப்பது தெரிய வந்தது.
அவரை பிடிப்பதற்காக திருச்சி தனிப்படை போலீசார் நேற்றுகாலை சங்கரன்கோவில் வந்தனர். குற்றப்பிரிவு போலீசார் உதவியுடன் பெரும்புத்தூர் கிராமத்துக்கு சென்று வேலு மகன் சண்முகவேல், களக்காடு அருகே உள்ள எஸ்என் பள்ளிவாசலை சேர்ந்த மாசானம் மகன் பன்னீர்செல்வம், ராஜபாளையத்தை சேர்நத ரமேஷ் உள்பட 4 பேரை சைபர் கிரைம் போலீசார் பிடித்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
விசாரணையில் கடந்த திமுக ஆட்சியில் அரசு போக்குவரத்து கழகத்தில் கண்டக்டர் வேலையில் சேர லஞ்சம் கேட்டதால் ஆத்திரமடைந்து இருந்தோம். இது தான் சரியான சமயம் என்று கருதி போனில் மிரட்டல் விடுத்தோம் என்று அவர்கள் கூறியதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
கடந்த திமுக ஆட்சியில் கே.என்.நேரு போக்குவரத்து அமைச்சராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications