சென்னைக்கு மே மாதம் வருகிறது கிருஷ்ணா தண்ணீர்?
தெலுங்கு கங்கை திட்ட கால்வாயில் சீரமைப்பு பணிகள் முடிவடைந்துள்ளதால் மே முதல் வாரத்தில் கிருஷ்ணா நீர் சென்னைக்கு வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னையின் குடிநீர் பிரச்சினையை சமாளிக்க ஆந்திர மாநிலத்தில் இருந்து கிருஷ்ணா தண்ணீரை பெற ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. ஆண்டு தோறும் ஆந்திர அரசு தமிழ்நாட்டுக்கு 12 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும்.
இது இரண்டு தடவையாக பெறப்பட வேண்டும் என்பது ஒப்பந்தத்தின் முக்கிய அம்சமாகும். இதன்படி ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரை 4 டி.எம்.சி. தண்ணீரும், ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டி.எம்.சி. தண்ணீரும் வர வேண்டும்.
ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து, கிருஷ்ணா கால்வாய்க்கு தண்ணீர் கொண்டு வரும் மதகு பகுதி சேதம் அடைந்ததால் முதற்கட்ட தண்ணீர் வரவில்லை.
இதே போல், சென்னைக்கு கிருஷ்ணா தண்ணீரை கொண்டு வரும் தெலுங்கு கங்கை திட்ட கால்வாயிலும் ஒரு சில இடங்களில் சீரமைப்பு பணிகள் நடந்து வந்தன. அந்த பணிகளும் முடிவடையும் நிலையில் உள்ளன.
தற்போது மதகு பகுதியில் இருந்து குழாய் மூலம் கிருஷ்ணா தண்ணீர் கொண்டு வர ஏற்பாடு நடந்து வருகிறது. இந்த பணிகள் விரைவில் முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, ஏப்ரல் மாதம் இறுதியில் அல்லது மே முதல் வாரத்தில் சென்னைக்கு கிருஷ்ணா தண்ணீர் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கால்வாய் பராமரிப்பு பணிகள் முடிந்ததும் கிருஷ்ணா தண்ணீரை திறந்து விட ஆந்திர அரசு தயாராக உள்ளது என்று ஆந்திர பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தமிழகம், ஆந்திரா இடையே கிருஷ்ணா நீர் பங்கீடு குறித்து போடப்பட்ட ஒப்பந்தப்படி இது வரை முழுமையான நீர் ஒருமுறை கூட தமிழ்நாட்டிக்கு கிடைத்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு!












Click it and Unblock the Notifications