கூடங்குளம் அணு மின் நிலையத்தால் எங்களுக்கு ஆபத்து: புலம்பும் இலங்கை

கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு எதிராக போராட்டம் நடந்து வருவதால் சுமார் 6 மாதங்கள் கழித்து கடந்த மாதம் 19ம் தேதி தான் அது திறக்கப்பட்டு பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன. இன்னும் 2 மாதத்தில் முதல் உலையில் மின் உற்பத்தி துவங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கூடங்குளம் அணு மின் நிலையத்தால் தங்கள் நாட்டிற்கு அச்சுறுத்தல் இருப்பதாக இலங்கை அரசு மத்திய அரசுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளது.
இது குறித்து இலங்கையைச் சேர்ந்த அணு உலை வல்லுனர்களும், ஆராய்ச்சியாளர்களும் கூறுகையில்,
கூடங்குளம் அணு மின் நிலையம் தமிழக கடலோரப் பகுதிகளுக்கு மட்டுமின்றி இலங்கைக்கும் அச்சுறுத்தலாக உள்ளது. எதிர்பாராவிதமாக அங்கு கதிர்வீச்சு ஏற்பட்டால் அது இலங்கை வரை பாதிப்பை ஏற்படுத்தும். ஏனென்றால் இலங்கையின் மேற்கு கடலோரப் பகுதியில் இருந்து வெறும் 240 கி.மீ. தூரத்தில் தான் கூடங்குளம் அணு மின் நிலையம் அமைந்துள்ளது.
பசுமை வீடுகளின் வாயுக்களின் வெளியேற்றம் அதிகரித்தால்(கிரீன் ஹவுஸ் கேஸஸ்) புயல், பெருமழை போன்ற இயற்கை பேரிடர்கள் ஏற்படும். இந்தியாவில் இது வரை அதிகபட்சமாக 200 மெகாவாட் திறன் கொண்ட அணு உலைகளே அமைக்கப்பட்டன. தற்போது கூடங்குளத்தில் முதன்முறையாக 1000 மெகாவாட் திறன் கொண்ட அணு உலைகள் அமைக்கப்பட்டுள்ளன. எனவே அந்த அணு உலைகளை நிர்வாகிப்பதில் சிறிய தவறு ஏற்பட்டாலும் பெரிய ஆபத்து ஏற்படும் என்றனர்.
இது பற்றி இலங்கை மின்சாரம் மற்றும் எரிசக்தி துறை அமைச்சர் படாலி சம்பிகா ரணாவகா கூறுகையில்,
கூடங்குளம் அணு உலை எங்களுக்கு அச்சத்தை அளிக்கிறது. இது குறித்து வெளியுறவுத் துறை அமைச்சகம் மூலம் நாங்கள் இந்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளோம். இந்த விவகாரத்தில் பரஸ்பரம் புரிந்து கொள்ளுதல் அடிப்படையில் செயல்படவே விரும்புகிறோம். கூடங்குளம் அணு மின் நிலையத்தால் இலங்கைக்கு அச்சுறுத்தல் உள்ளதா என்று எரிசக்தி ஆணையம் மூலம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த விவகராம் குறித்து சர்வதேச அணு சக்தி ஆணையத்திற்கும் தெரிவித்துள்ளோம். எங்கள் கடிதத்திற்கு இந்தியா அளிக்கும் பதிலை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம். கூடங்குளம் அணு மின் நிலையத்தில் மின் உற்பத்தி துவங்கும்போது சர்வதேச அணுசக்தி ஆணையத்தின் வழிகாட்டுதல்படி இந்தியா நடக்கும் என்று நம்புகிறோம் என்றார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications