புலிகள் மீதான தடையை நீக்கக் கோரும் வழக்கு: ஏப்.11-ல் இறுதி கட்ட விசாரணை
சென்னை: தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடையை நீக்கக் கோரி வைகோ தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனு மீதான இறுதிக் கட்ட விசாரணை ஏப்ரல் 11- ந்தேதி நடைபெறும் என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
தடை
விடுதலைப்புலிகளின் இயக்கத்துக்கு 1992-ம் ஆண்டு மத்திய அரசு தடை விதித்தது. இத்தடை 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நீட்டிக்கப்பட்டு வருகிறது. இத்தடையை நீட்டிப்பது தொடர்பாக அமைக்கப்பட்ட மத்திய தீர்ப்பாணையத்திடம் 2010-ம் ஆண்டு வைகோ மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில் புலிகள் இயக்கம் மீதான தடையை நீக்க வேண்டும் என்று வைகோ கோரியிருந்தார். ஆனால் வைகோவின் மனுவை தீர்ப்பாயம் தள்ளுபடி செய்தது.
வைகோ மேல்முறையீடு
இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வைகோ மேல்முறையீடு செய்தார். இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் தர்மாராஜ், வேணுகோபால் முன்னிலையில் இன்று நடைபெற்றது.
"இலங்கையில் நடந்த நிகழ்சிகளைக் கொண்டு இந்தியாவில் விடுதலைப்புலிகளுக்கு தடை விதிக்கக் கூடாது, 2010 ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்தியாவில் புலிகள் எந்த விதமான செயல்பாடுகளிலும் ஈடுபடவில்லை என்று வைகோ வாதிட்டர். வழக்கறிஞர்கள் ராதாகிருஷ்ணனும், மத்திய அரசின் வழக்கறிஞர் ரவீந்திரனும் வாதிட்டனர். இரு தரப்பு வாதத்தையும் கேட்ட பிறகு இறுதிக் கட்ட வழக்கு விசாரணையை ஏப்ரல் 11ந் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்..












Click it and Unblock the Notifications