சிறையில் உள்ள மாவோயிஸ்டு தலைவர்களை விடுதலை செய்ய ஒரிசா போலீசார் சங்கம் எதிர்ப்பு
புவனேஸ்வர்: ஆளும் கட்சி எம்.எல்.ஏ, இத்தாலிய பயணி ஆகியோரை மீட்பதற்காக சிறையில் உள்ள மாவோயிஸ்டு தலைவர்களை விடுதலை செய்யக் கூடாது என்று ஒரிசா மாநில போலீசார் சங்கம் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக ஒரிசா மாநில போலீசார் சங்கத் தலைவர் எஸ். சர்மா கூறியுள்ளதாவது:
55 பாதுகாப்புப் படையினரை படுகொலை செய்த செந்தா பனுஸானம் போன்ற மாவோயிஸ்டு தலைவர்களை விடுவிக்கும் எந்த ஒரு நடவடிக்கையையும் நிச்சயமாக ஒரிசா மாநில போலீசார் ஏற்றுக் கொள்ள மாட்டோம்.
எந்த மாவோயிஸ்டுகளுக்கு எதிராக போலீசார் தியாகம் செய்து நாட்டைக் காப்பாற்றினார்களோ அந்த மாவோயிஸ்டுகளை கெளரவமாக விடுதலை செய்வதை ஏற்க முடியாது.
இந்த விவகாரத்தில் மாநில போலீசாரின் கருத்தையும் அரசாங்கம் கேட்கும் என்று தலைமைச் செயலாளர் பட்நாயக் தெரிவித்திருந்த நிலையில் மாவோயிஸ்டுகள் விவகாரத்தில் எந்த ஒரு முடிவு எடுத்தாலும் எமது சங்கத்தின் முடிவை கேட்க வேண்டும்.
எங்களது விருப்பத்துக்கு மாறாக மாநில அரசாங்கம் செயல்படுமேயானால் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் போலீசார் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட நேரிடும் என்றார் அவர்.
இதனிடையே எம்.எல்.ஏ.ஜிஹா கிஹாவை விடுதலை செய்ய வேண்டுமெனில் தமது இயக்கத்தினர் 30 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்ற மாவோயிஸ்டுகளின் காலக்கெடு இன்றுடன் முடிவடைய உள்ளதால் ஒரிசா மாநிலத்தில் பரபரப்பான சூழ்நிலை நிலவிவருகிறது.












Click it and Unblock the Notifications