தமிழகத்தை பயமுறுத்தும் ஸ்வைன்: இதுவரை 32 பேருக்கு பாதிப்பு
சென்னை: தமிழகத்தில் இதுவரை 32 பேர் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழகத்தில் பன்றிக் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. முதன் முதலாக சென்னையில் தான் பன்றிக் காய்ச்சல் பரவியது. வெளிமாநிலங்களுக்கு சென்று வந்த 3 பேரால் தமிழகத்திற்குள் மீண்டும் பன்றிக் காய்ச்சல் வந்துள்ளது.
அது வேகமாக பரவ ஆரம்பித்துள்ளதையடுத்து சென்னையில் மட்டும் 14 பேருக்கு பன்றிக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது. அவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் மேலும் 3 பேருக்கு பன்றிக் காய்ச்சல் வந்துள்ளது. அவர்கள் 11,13,14 வயது சிறுவர், சிறுமியர் ஆகும். அதில் 11, 14 வயது சிறுமிகள் ராயபேட்டையைச் சேர்நத்வர்கள் ஆவர்.
மேலும் மயிலாப்பூரில் 3 வயது ஆண் குழந்தைக்கு பன்றிக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதை சேர்த்து சென்னையில் மட்டும் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 17க உயர்ந்துள்ளது.
இதே போன்று கோவையிலும் பன்றிக் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. அங்கு ஏற்கனவே 75 வயது விவசாயி ஒருவர் பன்றிக் காய்ச்சலால் பலியானார். இதைத் தொடர்ந்து 6 பேருக்கு பன்றிக் காய்சச்ல் இருப்பது தெரிய வந்தது. இந்நிலையில் நேற்று மேலும் 4 பேரை பன்றிக் காய்ச்சல் தாக்கியது. இது தவிர திருப்பூரில் 2 பேர், திருவள்ளூர், திருவாரூர், கடலூர் மாவட்டங்களில் தலா ஒருவர் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து தமிழகத்தில் மொத்தம் 32 பேருக்கு பன்றிக் காய்ச்சல் உள்ளது. அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களில் யார் உயிருக்கும் ஆபத்து இல்லை என்று கூறப்படுகிறது. பன்றிக் காய்ச்சல் மேலும் பரவாமல் இருக்க சுகாதாரத்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
தற்போது பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் குடும்பத்தார் யாருக்காவது அந்த பாதிப்பு இருக்கிறதா என்று பரிசோதனை செயய்யப்பட்டது. மேலும் அவர்ககளுக்கு சிகிச்சை அளித்து வரும் டாக்டர்கள், நர்சுகள் ஆகியோருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
வெளி மாநிலங்களுக்கு சென்று வந்தவர்களால் பன்றிக் காய்ச்சல் பரவியதால் ரயில் மற்றும் விமான நிலையங்களில் பயணிகள் தீவிர சோதனைக்குட்படுத்தப்படுகின்றனர். சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நேற்று இரண்டாவது நாளாக நடத்தப்பட்ட சோதனையின்போது காய்ச்சல், சளி அறிகுறிகளுடன் வந்த 56 பயணிகளை டாக்டர்கள் பரிசோதித்தனர். அதே போன்று சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 26 பேர் பரிசோதிக்கப்பட்டனர். அவர்களில் யாருக்கும் பன்றிக் காய்ச்சல் இல்லை. விமான நிலையத்தில் நேற்று நடத்தப்பட்ட சோதனையில் எந்த பயணிக்கும் பன்றிக் காய்ச்சல் இல்லை.
ரயில் மற்றும் விமான நிலையங்கள் தொடர்ந்து சோதனை நடத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications