நாடு முழுவதும் நடக்கும் போலி என்கவுண்டர்களையும் விசாரியுங்கள்-குஜராத் அதிரடி வழக்கு!

இதுதொடர்பாக குஜராத் அரசு தாக்கல் செய்திருந்த மனுவில்,
போலீசாரால் செய்யப்படும் என்கவுன்டரை நாடு முழுவதும் உள்ள பல்வேறு குழுக்கள் கண்காணித்து வருகின்றன. ஆனால் குஜராத் மாநிலத்தை மட்டும் கூடுதலாக கண்காணித்து அம்மாநில போலீசை தாக்குகின்றனர். போலி என்கவுன்டர்கள் நாடு முழுவதும் நடப்பதால் அவை அனைத்தையும் விசாரிக்க ஒரே முறையை பின்பற்ற வேண்டும். இதற்கென தனி கொள்கைகளை வகுத்து தனி அமைப்பை ஒன்றையும் உருவாக்க வேண்டும்.
போலி என்கவுன்டர்களை கண்காணிக்க குஜராத் சார்பாக சிறப்பு கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு போலி என்கவுன்டர்களைக் குறித்து விசாரணை நடத்துகிறது.
இந்த அமைப்பு செயல்படுவது போல் நாடு முழுவதும் உள்ள கண்காணிப்புக் குழுக்கள் ஒரே மாதிரியாக செயல்பட உத்தரவிட வேண்டும். இதனால் மனித உரிமை மீறல்கள் தடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
இந்த மனுவை நீதிபதிகள் அப்தாப் ஆலம் மற்றும் ரஞ்சனா பிரகாஷ் தேசாய் ஆகியோரை கொண்ட பெஞ்ச் ஏற்றுக்கொண்டது. மேலும் இதுகுறித்து பதிலளிக்குமாறு தேசிய மனித உரிமை ஆணையம், மத்திய அரசு மற்றும் அனைத்து மாநில அரசுகளுக்கும் உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
குஜராத்தில் பாஜக ஆட்சிக்காலத்தில் நடந்த பல்வேறு போலி என்கவுண்டர்களில் பலர் கொலையாகியுள்ளனர். இதில் இஷ்ரத் ஜெகான், சோராபுதீன் ஷேக் ஆகியோரின் கொலைகள் முக்கியமானவை. இதுகுறித்து சிபிஐ மற்றும் உச்சநீதிமன்றம் அமைத்த சிறப்பு புலனாய்வுப் படைகள் விசாரித்து வருகின்றன. மேலும் இந்த வழக்குகளை உச்சநீதிமன்றமே நேரில் கண்காணித்தும் வருகிறது. இந்த நிலையில் அத்தனை மாநிலங்களிலும் நடைபெறும் போலி என்கவுண்டர்கள் தொடர்பாக பிரச்சினையை எழுப்பியுள்ளது குஜராத் அரசு என்பது புதிய திருப்பமாக பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications