தமிழக அரசைக் கண்டித்து மாநிலம் முழுவதும் இன்று தி.மு.க. கண்டனப் பொதுக்கூட்டம்
சென்னை: தமிழக அரசின் மின் கட்டணம், பேருந்து கட்டணம், பால்விலை உயர்வைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் தி.மு.க. சார்பில் இன்று கண்டனப் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.
சென்னை மயிலாப்பூர் மாங்கொல்லையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதி, துணைப் பொதுச்செயலாளர் துரைமுருகன் உரையாற்றுகின்றனர்.
கனிமொழியும் பேசுகிறார்
வாலாஜாவில் தி.மு.க. பொதுச் செயலாளர் க.அன்பழகன், மதுரையில் மு.க.ஸ்டாலின், சென்னை திருவொற்றியூரில் கனிமொழி ஆகியோர் பொதுக்கூட்டங்களில் பங்கேற்கின்றனர்.
தஞ்சையில் எஸ்.பி. சற்குணபாண்டியன், திருச்சியில் கோவை ராமநாதன், திருவள்ளூரில் பொன்முடி, தாம்பரத்தில் எ.வ. வேலு, நெல்லையில் கம்பம் செல்வேந்திரன், சென்னை மாதவரத்தில் நடிகர் வாகை சந்திரசேகர், செங்கல்பட்டில் நடிகர் குமரிமுத்து, தூத்துக் குடியில் முன்னாள் அமைச்சர் ரகுபதி ஆகியோர் பேசுகின்றனர்.












Click it and Unblock the Notifications