உழைப்பிற்கு வயதில்லை: 109 வயது "இளைஞருக்கு" அரசு விருது வழங்க கோரிக்கை!

Subscribe to Oneindia Tamil

Grandpa
கீழக்கரை: கீழக்கரையைச் சேர்ந்த 109 வயது செய்யது அபுதாகிருக்கு தமிழக அரசு சார்பில் சிறப்பு விருது வழங்க வேண்டும் என்று மீனவர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பழைய குத்பா பள்ளி தெருவைச் சேர்ந்தவர் செய்யது அபுதாகிர்(109). கீழக்கரை மீன் மார்க்கெட்டில் மீன்களை சுத்தப்படுத்தும் தொழில் செய்து வருகிறார். வயது முதிர்ந்தாலு்ம் இன்று வரை இளைஞர்களுக்கு எடுத்துக்காட்டாகவும், உழைப்பிற்கு வயதில்லை என்பதை நிரூபிப்பது போல் சுறுசுறுப்பாக உழைத்துக் கொண்டிருக்கும் செய்யது அபுதாகிர் பலரையும் ஆச்சரியபடுத்துகிறார். மீன்களை சுத்தப்படுத்தும் தொழிலில் வாடிக்கையாளர்கள் கொடுக்கின்ற கூலியைப் பெற்றுக்கொள்ளு்ம் இவர் பேரம் பேசுவதில்லை.

இது போன்ற கடினமான வேலையில் ஈடுபடும்போது சிறிது கவனம் சிதறினாலும் கைகளில் ரத்தகாயம் ஏற்பட்டுவிடும். ஆனால் இந்த முதிய வயதிலு்ம் இவர் இவ்வளவு துல்லியமாக வெட்டுவதற்கு காரணம் செய்யும் தொழிலி்ல் இருக்கும் ஈடுபாடு தான்.

இது குறித்து சிறு தொழில் மீனவர் சங்க தலைவர் லுக்மானுல் ஹக்கீம் மற்றும் செயலாள‌ர் நல்ல இப்ராகிம் ஆகியோர் கூறுகையில்,

ஆண்டுதோறும் மத்திய மற்றும் மாநில அரசுகள் சிறப்பான செயல்களுக்காக‌ பல்வேறு விருதுகளை அறிவித்து பலரையும் கெளரவப்படுத்துகிறது. அந்த வகையில் உழைப்பிற்கு எடுத்துக்காட்டாக திகழும் 100 ஆண்டுகளைக் கடந்த மூத்த குடிமகனான அபுதாகிர் அவர்களுக்கு சிறப்பு விருது கொடுக்க அரசு முன்வர வேண்டும் என்றனர்.

ஏற்கனவே இவருக்கு ரோட்டரி சங்கம் சார்பில் விருது வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இக்கால இளைஞர்களுக்கு முன்மாதிரியாகத் திகழும் உழைப்பின் சிகரம் செய்யது அபுதாகிர் அவர்கள் நல்ல ஆரோக்கியம் பெற்று, நீண்ட ஆயுளை பெற ஈமான டைம்ஸ் வாழத்துகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+