10 வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி நாளை துவக்கம்: மே 5க்குள் முடிக்க உத்தரவு
நெல்லை: 10ம் வகுப்பு தேர்வுகள் நேற்று முன்தினம் முடிந்தன. விடைத்தாள்கள் திருத்தும் பணி நாளை(26ம் தேதி) தொடங்குகிறது. மே 5ம் தேதிக்குள் இப்பணியை முடிக்க கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 10ம் வகுப்பு தேர்வுகள் கடந்த 4ம் தேதி தொடங்கின. தமிழகம் முழுவதும் 10 லட்சத்து 84 ஆயிரத்து 575 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். இதற்காக 3 ஆயிரத்து 33 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த தேர்வுகள் நேற்று முன்தினம் நிறைவடைந்தன. தேர்வுகள் முடிந்ததை அடுத்து தமிழகம் முழுவதும் 10ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி வரும் நாளை தொடங்கிறது. இதற்காக 66 கல்வி மாவட்ட அலுவலகங்களுக்கும் நியமிக்கப்பட்டுள்ள முகாம் அலுவலர்கள் நேற்று முன்தினம் பொறுப்பேற்றனர். நெல்லை கல்வி மாவட்ட முகாம் அலுவலராக மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் சுடலைமணி பொறுப்பேற்றுக் கொண்டார். நெல்லையில் விடைத்தாள்கள் திருத்தும் பணி இக்னேஷியஸ் கான்வென்ட்டில் நடக்கிறது.
சேரன்மகாதேவி கல்வி மாவட்ட முகாம் அலுவலராக மாவட்ட கல்வி அலுவலர் முருகன் பொறுப்பேற்றார். இந்த கல்வி மாவட்டத்துக்கு அனுப்பப்பட்டு்ள்ள விடைத்தாள்கள் வள்ளியூர் பாத்திமா மேல்நிலைப்பள்ளியில் வைத்து மதிப்பீடு செய்யப்படுகிறது. தென்காசி கல்வி மாவட்ட முகாம் அலுவலராக தென்காசி மாவட்ட கல்வி அலுவலர் ராமலிங்கம் பொறுப்பேற்றார். இந்த கல்வி மாவட்டத்துக்கு அனுப்பப்படும் விடைத்தாள்கள் திருத்தும் பணி கடையநல்லுர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடக்கிறது.












Click it and Unblock the Notifications