அந்தமான், நிக்கோபாரில் 5.8 ரிக்டர் நிலநடுக்கம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: அந்தமான், நிக்கோபார் தீவுகளில் இன்று பிற்பகல் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 5.8க பதிவாகியிருந்தது. இதனால் பாதிப்புகள் ஏற்பட்டதாகத் தகவல்கள் இல்லை.

அந்தமான், நிக்கோபார் தீவுகளில் இன்று பிற்பகல் 1.12 மணி்க்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.8க பதிவாகியிருந்தது. இதனால் மக்கள் பீதியடைந்து தெருக்களுக்கு ஓடி வந்தனர். ஆனால் இந்த நிலநடுக்கத்தால் உயிர் சேதமோ, பொருட்சேதமோ ஏற்பட்டதாக இதுவரை எந்த தகவலும் வரவில்லை.

கடந்த 11ம் தேதி தான் இந்தோனேசியாவில் 8.6 அளவுக்கு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதையடுத்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நில அதிர்வு உணரப்பட்டது. கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் அலறியடித்துக் கொண்டு வீடுகளை விட்டு வெளியே ஓடி வந்தனர். நிலநடுக்கத்தையடு்தது இந்தியா உள்பட 26 நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டிருந்தது. பின்னர் சுனாமி எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டது.

சுனாமி எச்சரிக்கை விடப்பட்டிருந்தபோது சென்னைவாசிகள் சுனாமிப் பேரலையைப் பார்க்க கடற்கரையில் ஆர்வமாக காத்திருந்தனர். எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டபோது அவர்கள் ஏமாற்றம் அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+