25 வருடங்களுக்கு முன்பே இதைச் சொல்லியிருக்கலாம் லின்டர்ஸ்டிரோம்-அமிதாப்

போபர்ஸ் விவகாரத்தால் பாதிக்கப்பட்டவர்களில் அமிதாப்பும் கூட ஒருவர். ஆனால் அவருக்கும், இந்த ஊழலுக்கும் சம்பந்தமில்லை. அவரது பெயரைச் சம்பந்தப்படுத்த இந்திய விசாரணை அமைப்புகள் தீவிரமாக முயன்றன என்று லின்டர்ஸ்டிரோம் தனது பேட்டியில் தெரிவித்துள்ளார். இதை அமிதாப் வரவேற்றுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், நான் வெற்றி பெற்றதாக உணர்கிறேன். எனது நிலை சரி என்பதை லின்டர்ஸ்டிரோமின் பேட்டி உணர்த்துகிறது. நான் நிரபராதி என்பது இப்போதாவது வெளிச்சத்திற்கு வந்ததே.
லின்டர்ஸ்டிரோமின் பேட்டி குறித்து அறிந்து நானும், எனது குடும்பத்தினரும் அளவில்லாத மகிழ்ச்சியில் திளைத்துள்ளோம். நாங்கள் நிரபராதிகள் என்று லின்டர்ஸ்டிரோம் கூறியுள்ளார். மேலும் எங்களுக்கு எதிராக எந்த ஒரு ஆதாரமும் இன்று வரை இல்லை.
இந்த சான்றிதழை லின்டர்ஸ்டிரோம் கொடுத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால் 25 ஆண்டுகளுக்கு முன்பே இது வந்திருக்கலாம். இந்த கால கட்டத்தில் நானும், எனது குடும்பத்தினரும் பட்ட கவலைகள், வேதனைகள், அவமானங்களை சொல்லில் வடிக்க முடியாது. இப்போது நாங்கள் நிம்மதி அடைந்துள்ளோம்.
எனக்கு பெரும் வேதனை என்னவென்றால் எனது பெற்றோர் உயிருடன் இருந்தபோதே உண்மை வெளிவராமல் போய் விட்டதே என்பதுதான். எனது தந்தை, போபர்ஸ் சர்ச்சை வெடித்தபோது நீ ஏதாவது தவறு செய்திருக்கிறாயே என்று என்னைப் பார்த்துக் கேட்டபோது நான் துடித்துப் போய் விட்டேன். என்ன பதில் சொல்வது என்று கூட எனக்குத் தெரியவில்லை. என் பெயர் போபர்ஸ் விவகாரத்தில் இழுக்கப்பட்டதால் எனது தந்தை பெரும் வேதனை அடைந்தார். ஆனால் இன்று உண்மை என்னிடம் இருக்கும்போது, எனது தந்தை என்னிடம் இல்லை.
வயதான காலத்தில், தங்களது வாழ்க்கையின் கடைசிக்கட்டத்தில் பெரும் வேதனையைச் சுமந்தபடி அவர்கள் மரணத்தை சந்தித்தது எனக்கு நீங்காத வேதனையாக என்றும் இருக்கும்.
எனது பெயரை திட்டமிட்டு வேண்டும் என்றே சேர்த்தனர் என்று லின்டர்ஸ்டிரோம் கூறியிருப்பது எனக்கு பெரும் அதிர்ச்சித் தகவலாக உள்ளது. இந்த்த தகவல் லின்டர்ஸ்டிரோமுக்கு முன்பே தெரிந்த ஒன்றுதான். ஆனால் இத்தனை காலமாக இதை ஏன் சொல்லாமல் மறைத்து வந்தார் என்பதுதான் எனக்குப் புரியாத புதிராக உள்ளது என்று கூறியுள்ளார் அமிதாப் பச்சன்.
மறைந்த ராஜீவ் காந்தியின் நெருங்கிய நண்பராக இருந்தவர்தான் அமிதாப் பச்சன். ராஜீவ் காந்தியின் பெயர் போபர்ஸ் ஊழல் விவகாரத்தில் சிக்கியபோது அமிதாப் பச்சனும் சேர்ந்து சிக்கினார். பின்னர் ராஜீவ் குடும்பமும், அமிதாப் குடும்பமும் நட்பிலிருந்து பிரிந்து போய் விட்டது. என்பது நினைவிருக்கலாம்.
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications