25 வருடங்களுக்கு முன்பே இதைச் சொல்லியிருக்கலாம் லின்டர்ஸ்டிரோம்-அமிதாப்

போபர்ஸ் விவகாரத்தால் பாதிக்கப்பட்டவர்களில் அமிதாப்பும் கூட ஒருவர். ஆனால் அவருக்கும், இந்த ஊழலுக்கும் சம்பந்தமில்லை. அவரது பெயரைச் சம்பந்தப்படுத்த இந்திய விசாரணை அமைப்புகள் தீவிரமாக முயன்றன என்று லின்டர்ஸ்டிரோம் தனது பேட்டியில் தெரிவித்துள்ளார். இதை அமிதாப் வரவேற்றுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், நான் வெற்றி பெற்றதாக உணர்கிறேன். எனது நிலை சரி என்பதை லின்டர்ஸ்டிரோமின் பேட்டி உணர்த்துகிறது. நான் நிரபராதி என்பது இப்போதாவது வெளிச்சத்திற்கு வந்ததே.
லின்டர்ஸ்டிரோமின் பேட்டி குறித்து அறிந்து நானும், எனது குடும்பத்தினரும் அளவில்லாத மகிழ்ச்சியில் திளைத்துள்ளோம். நாங்கள் நிரபராதிகள் என்று லின்டர்ஸ்டிரோம் கூறியுள்ளார். மேலும் எங்களுக்கு எதிராக எந்த ஒரு ஆதாரமும் இன்று வரை இல்லை.
இந்த சான்றிதழை லின்டர்ஸ்டிரோம் கொடுத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால் 25 ஆண்டுகளுக்கு முன்பே இது வந்திருக்கலாம். இந்த கால கட்டத்தில் நானும், எனது குடும்பத்தினரும் பட்ட கவலைகள், வேதனைகள், அவமானங்களை சொல்லில் வடிக்க முடியாது. இப்போது நாங்கள் நிம்மதி அடைந்துள்ளோம்.
எனக்கு பெரும் வேதனை என்னவென்றால் எனது பெற்றோர் உயிருடன் இருந்தபோதே உண்மை வெளிவராமல் போய் விட்டதே என்பதுதான். எனது தந்தை, போபர்ஸ் சர்ச்சை வெடித்தபோது நீ ஏதாவது தவறு செய்திருக்கிறாயே என்று என்னைப் பார்த்துக் கேட்டபோது நான் துடித்துப் போய் விட்டேன். என்ன பதில் சொல்வது என்று கூட எனக்குத் தெரியவில்லை. என் பெயர் போபர்ஸ் விவகாரத்தில் இழுக்கப்பட்டதால் எனது தந்தை பெரும் வேதனை அடைந்தார். ஆனால் இன்று உண்மை என்னிடம் இருக்கும்போது, எனது தந்தை என்னிடம் இல்லை.
வயதான காலத்தில், தங்களது வாழ்க்கையின் கடைசிக்கட்டத்தில் பெரும் வேதனையைச் சுமந்தபடி அவர்கள் மரணத்தை சந்தித்தது எனக்கு நீங்காத வேதனையாக என்றும் இருக்கும்.
எனது பெயரை திட்டமிட்டு வேண்டும் என்றே சேர்த்தனர் என்று லின்டர்ஸ்டிரோம் கூறியிருப்பது எனக்கு பெரும் அதிர்ச்சித் தகவலாக உள்ளது. இந்த்த தகவல் லின்டர்ஸ்டிரோமுக்கு முன்பே தெரிந்த ஒன்றுதான். ஆனால் இத்தனை காலமாக இதை ஏன் சொல்லாமல் மறைத்து வந்தார் என்பதுதான் எனக்குப் புரியாத புதிராக உள்ளது என்று கூறியுள்ளார் அமிதாப் பச்சன்.
மறைந்த ராஜீவ் காந்தியின் நெருங்கிய நண்பராக இருந்தவர்தான் அமிதாப் பச்சன். ராஜீவ் காந்தியின் பெயர் போபர்ஸ் ஊழல் விவகாரத்தில் சிக்கியபோது அமிதாப் பச்சனும் சேர்ந்து சிக்கினார். பின்னர் ராஜீவ் குடும்பமும், அமிதாப் குடும்பமும் நட்பிலிருந்து பிரிந்து போய் விட்டது. என்பது நினைவிருக்கலாம்.
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications