கருணாநிதியுடன் பேசியதை சோனியாவிடம் சொல்வேன்-அந்தோணி

சோனியா காந்தியின் தூதராக இன்று சென்னை வந்த அந்தோணி, திமுக தலைவர் கருணாநிதியின் வீட்டில் அவரைச் சந்தித்துப் பேசினார். அப்போது துணைவியார் ராசாத்தி அம்மாள், மகள் கனிமொழி, முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
சந்திப்புக்குப் பின்னர் வெளியே வந்த அந்தோணியிடம் செய்தியாளர்கள், என்ன பேசினீர்கள் என்று கேட்டனர். அதற்குப் பதிலளித்த அந்தோணி, இது பலன் உள்ள சந்திப்பாக இருந்தது. இந்தப் பேச்சுவார்த்தை குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் தெரிவிப்பேன்.
தற்போதைய அரசியல் சூழல் குறித்து திமுக தலைவருடன் பேசி விட்டு வருமாறு சோனியா காந்தி கேட்டுக் கொண்டார். அதன்படியே வந்து பேசினேன். நாங்கள் இங்கு என்ன பேசினோமோ அதை சோனியா காந்தியிடம் தெரிவிப்பேன்.
கருணாநிதி நாட்டின் முக்கிய அரசியல் தலைவர்களில் ஒருவர். அவருடைய ஆலோசனைகளுக்கு எப்போது காங்கிரஸ் மதிப்பு கொடுத்து வந்திருக்கிறது என்றார்.












Click it and Unblock the Notifications