நித்தியானந்தாவை மதுரை ஆதீனமாக நியமித்ததற்கு எதிர்ப்பு- இந்து அமைப்புகள் போராட்டத்தால் பதற்றம்

நித்தியானந்தாவின் பெங்களூர் ஆசிரமத்தில் 293-வது மதுரை ஆதீனமாக முடிசூட்டப்பட்டார். பின்னர் இன்று அவர் மதுரையில் பொறுப்பேற்றுக் கொண்டார். தற்போதைய ஆதீனமும் நித்தியானந்தாவும் கூட்டாக செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தனர்.அப்போது நித்தியானந்தா நியமனத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து மதுரை ஆதீன மடத்துக்குள் நுழைய இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் முயன்றன. இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவியது.
தற்போதைய ஆதீனம் ஏதோ ஒரு பிரச்சனையில் நித்தியானந்தாவிடம் சிக்கியிருப்பதாகவும் அதனாலே 293-வது ஆதீனமாக நித்தியானந்தாவை முடிசூட்டியிருப்பதாகவும் இந்து அமைப்பினர் குற்றம்சாட்டினர். இது தொடர்பாக ஆதீனத்திடம் தனியே பேச வேண்டும் என்றும் அவர்கள் கோரினர். மேலும் ஆதீனத்திற்குள் நுழைந்த இந்து மக்கள் கட்சியினர் சிலர் திருஞான சம்பந்தரின் பாடல்களைப் பாடினர். அதற்குப் போட்டியாக நித்தியானந்தாவின் புகழைப் பாடினர் அவரது ஆதரவாளர்கள். இதனால் இரு தரப்புக்கும் இடையே மோதல் மூளும் நிலை ஏற்பட்டது.
இருதரப்பும் மாறி மாறி முழக்கங்களை எழுப்பியதால் போலீசார் பெருமளவில் குவிக்கப்பட்டனர். பின்னர் இருதரப்பினரையும் அழைத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அமைதி திரும்பியது. இருப்பினும் முன்னெச்சரிக்கையாக போலீஸார் நிறுத்தப்பட்டுள்ளனர்.
ரூ1 கோடி "பாதகாணிக்கை"
முன்னதாக மதுரை ஆதீனம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
8 ஆண்டுகளாக மதுரை மடத்துக்கு தகுந்த சீடரைத் தேடிவந்தேன். இந்நிலையில்தான் எனது சீடர் நித்தியானந்தாவுக்கு முடிசூட்டினேன். அவருக்கு எதிர்ப்பு தெரிவிப்பது என்பது அறியாமைதான். அவர் ஒழுக்கமானவர். தவறு ஏதுமே செய்யாதவர். பணம் கொடுத்தெல்லாம் அவர் பதவி பெறவில்லை. ரூ1 கோடியை அவர் பாதகாணிக்கையாகத்தான் கொடுத்தார். அவருக்கு மகுடம் சூட்டப்பட்டதால் மதுரை ஆதீனம் மடத்துக்குத்தான் புண்ணியம் சேர்ந்துள்ளது என்றார்.
நித்தியானந்தா கூறியதாவது:
எனக்குப் பிரச்சனைகள் இருப்பதால் தலைமைப் பொறுப்பை ஏற்க தயங்கினேன். இருப்பினும் குருவின் தைரியமான பேச்சால் நான் தலைமைப் பொறுப்பை ஏற்றேன். பெங்களூர் மடத்துக்கு யார் வேண்டுமானாலும் வரலாம்..போகலாம்.. மதுரை மடத்தை நிர்வகிக்க பிடதியிலிருந்து 50 பேரை அனுப்பி வைக்க உள்ளேன். அதேபோல் மதுரையில் 100 கிராமங்கள் பயனடையும் வகையில் பள்ளிக்கூடங்கள், கல்லூரிகளைத் தொடங்கவும் திட்டமிட்டுள்ளேன் என்றார்.
-
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்?












Click it and Unblock the Notifications