குளித்தலை நகராட்சியில் ஜெயலலிதா படம் உள்ளே, கருணாநிதி படம் வெளியே
கரூர்: குளித்தலை நகர்மன்ற கூட்ட அரங்கில் முதல்வர் ஜெயலலிதா படம் வைக்கப்பட்டுள்ளது. ஆனால் அங்கிருந்த முன்னாள் முதல்வர் கருணநிதியின் படம் அகற்றப்பட்டது.
கரூர் மாவட்டம் குளித்தலை நகர்மன்ற கூட்ட அரங்கில் முதல்வர் ஜெயலலிதா படம் வைக்க வேண்டும் என குளித்தலையைச் சேர்ந்த கவுன்சிலர் ஒருவர் மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்தார். இதையடுத்து குளித்தலை தாசில்தார் செல்வராஜ் தலைமையிலான அரசு அலுவலர்கள் முதல்வர் ஜெயலலிதாவின் புகைப்படத்தை கூட்ட அரங்கில் வைத்தனர்.
குளித்தலை நகர் மன்றத்தில் திமுகவினர் அதிகம் உள்ளதால் திமுகவைச் சேர்ந்த நகர்மன்ற உறுப்பினர்கள் அதே அரங்கில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உருவப்படத்தை மாட்டி வைத்தனர். ஆனால் கருணாநிதியின் படத்தை வருவாய்த் துறையினர் அகற்றினர்.
இதனால் குோளித்தலை நகராட்சி நிர்வாகத்தையும், கரூர் மாவட்ட வருவாய்த்துறை அதிகாரிகளையும் கண்டித்து திமுக சார்பில் கண்டன போராட்டம் நடத்தவிருப்பதாகக் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications