திருச்சூர் பூரம் விழாவில் யானைக்கு திடீர் மதம்- பக்தர்கள் அலறி ஓடியதில் 62 பேர் காயம்
திருச்சூர்: கேரள மாநிலம் திருச்சூரில் ஆண்டுதோறும் நடைபெறும் பிரம்மாண்டமான யானைகள் பங்கேற்கும் பூரம் திருவிழாவில் இந்த ஆண்டும் ஒரு யானை மதம் பிடித்து பிளிறி ஓட திருவிழா இடமே களேபரமானது.
திருச்சூர் வடக்குநாதர் சிவன் கோயில் பூரம் திருவிழாவில் 100-க்கும் மேற்பட்ட யானைகள் சாமி சிலைகளுடன் ஊர்வலமாக செல்லும். இதனை பார்ப்பதற்காக பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கானோர் திரளவர்.
இந்த ஆண்டுக்கான பூரம் விழா கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வருகின்றன. யானைகளின் அலங்கரிப்பையும் ஊர்வலத்தையும் நாள்தோறும் பார்வையிட்டு வந்தனர். திருவிழாவின் கடைசி நாளான நேற்று யானைகள் தங்கள் இருப்பிடங்களுக்கு பிரிந்து செல்லும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
அப்போது காளிதாசன் என்ற யானையை அருகில் இருந்த யானை தந்தத்தால் குத்தி வலி ஏற்படுத்திவிட அந்த இடமே கிலி கொண்டது. காளிதாசன் யானை பிளிறி ஓடி எதிர்பட்ட கடைகளை துவம்சம் செய்து. வாகனங்களை தூக்கி வீசி பாகனை கீழே தூக்கிப் போட்டது. இதனால் பெரும் நெரிசலும் பதற்றமும் ஏற்பட்டது. இதில் குழந்தைகள் உட்பட 62 பேர் படுகாயமடைந்தனர்.
உடனே சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்ட கால்நடை மருத்துவக் குழுவினர் யானைக்கு மயக்க ஊசி செலுத்தினர். யானை கட்டுக்குள் வர 30 நிமிடங்களானது. இச்சம்பவத்தால் திருச்சூரில் பெரும் பரப்பரப்பு ஏற்பட்டது.
திருச்சூர் பூரம் திருவிழாவில் எப்படியும் ஏதேனும் ஒரு யானைக்கு மதம் பிடிப்பதும் களேபரமாகி உயிரிழப்பு வரை செல்வதும் வாடிக்கையாகிவருவது குறிப்பிடத்தக்கது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications