அரசு கல்லூரிகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்த ரூ.100 கோடி நிதி: ஜெயலலிதா அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

Jayalalitha
சென்னை: தமிழகத்தில் உள்ள அரசு கல்லூரிகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்த முதல்வர் ஜெயலலிதா ரூ.100 கோடி நிதி ஒதுக்கியுள்ளார்.

இது குறித்து சட்டசபையில் அவர் 110வது விதியின்கீழ் படித்த அறிக்கை வருமாறு,

கல்வித் துறையில் முதன்மை மாநிலமாக தமிழ்நாடு விளங்க வேண்டும் என்ற நோக்கில் பல்வேறு முன்னோடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அனைத்து மாணவ, மாணவியரும் இடையில் நிற்காமல் உயர் கல்வி கற்று, அதன் மூலம் அவர்களின் வாழ்க்கைத் தரம் உயர வேண்டும் என்பதைக் குறிக்கோளாகக் கொண்டு அரசு செயல்படுகிறது.

அதனடிப்படையில் தமிழ்நாட்டில் இந்த ஆண்டு 2 புதிய அரசு பொறியியல் கல்லூரிகள், 7 புதிய அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகள் (பாலிடெக்னிக்), 11 புதிய கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்பட உள்ளன. புதிய கல்லூரிகள் ஏற்படுத்துவதுடன் இப்போதுள்ள கல்லூரிகளில் மாணவ, மாணவியர் உற்சாகத்துடன் கல்வி பயிலும் வகையில் நல்லதொரு சூழ்நிலை ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதே என் விருப்பம்.

இதன் அடிப்படையில் இப்போது தமிழகத்தில் செயல்பட்டு வரும் 62 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், 7 அரசு கல்வியியல் கல்லூரிகள், 24 பல்கலைக்கழக உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் என மொத்தம் 93 அரசு மற்றும் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளின் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும். இக் கல்லூரிகளுக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் உடனடியாக செய்து தர அரசு முடிவெடுத்துள்ளது. இதன்படி ஏற்கனவே குறிப்பிட்ட அரசுக் கல்லூரிகள், பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளின் உள்கட்டமைப்பு வசதிகள் ரூ.100 கோடி செலவில் மேம்படுத்தப்படும்.

இந்த நிதியிலிருந்து புதிய மேஜைகள், நாற்காலிகள் வழங்குதல், நவீன கரும்பலகைகள், அறிவிப்புப் பலகைகள் அமைத்தல், மொழி ஆய்வகங்களுக்கு கணினி மேஜைகள், கணினி நாற்காலிகள் வழங்குதல், புத்தகங்கள் வைக்க அலமாரிகள் அமைத்துத் தருதல், நூலகங்களுக்குப் புத்தகங்கள் வழங்குதல், நூலகங்கள் கணினிமயம் ஆக்கப்படுதல், தரமான ஆய்வுக் கூடங்கள் அமைத்தல், அறிவியல் துறைகளுக்கு புரொஜெக்டர் வழங்குதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும்.

சுகாதாரமான குடிநீர் வழங்க வசதிகள் ஏற்படுத்தித் தருதல், மாணவர் விடுதிகளில் சமையலறைக் கூடங்களை மேம்படுத்துதல், கழிப்பறை வசதிகள், மின் விளக்கு, மின் விசிறி ஏற்படுத்தித் தருதல் ஆகிய பணிகளும் மேற்கொள்ளப்படும். அரசுக் கல்லூரிகளில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த இதுவரை இல்லாத அளவு உயர் ஒதுக்கீடாக ரூ.100 கோடி ரூபாய் வழங்கப்படுகிறது என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+