கோடை விழா: மே 12,13ல் ஊட்டியில் ரோஜா கண்காட்சி
ஊட்டி: கோடை விழாவை முன்னிட்டு வரும் 12, 13 ஆகிய தேதிகளில் ஊட்டி ரோஜா பூங்காவில் ரோஜா கண்காட்சி நடக்கிறது.
நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் ஆண்டுதோறும் கோடை விழாவை சுற்றுலாத் துறை நடத்தி வருகிறது. அப்போது ரோஜா, மலர்கள், காய்கறிகள் மற்றும் பழங்கள் கண்காட்சி நடத்தப்படும். இந்த ஆண்டுக்கான கோடை விழாவை முன்னிட்டு வரும் 5ம் தேதி முதல் மாத இறுதி வரை பல்வேறு கண்காட்சிகள் நடத்தப்படுகிறது.
விழாவின் ஒரு பகுதியாக சுற்றுலா துறை சார்பில் வரும் 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் கோத்தகிரி நேரு பூங்காவில் காய்கறி கண்காட்சி நடைபெற உள்ளது. மேலும் வரும் 6,7 ஆகிய 2 தேதிகளில் கூடலூர் புனித தாமஸ் பள்ளி வளாகத்தில் வாசனை திரவிய கண்காட்சி நடக்கிறது.
இது தவிர விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ரோஜா கண்காட்சி வரும் 12 மற்றும் 13 தேதிகளில் ஊட்டி ரோஜா பூங்காவில் நடக்கிறது. மே 18, 19 மற்றும் 20 ஆகிய 3 தேதிகளில் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சியும், 26, 27 தேதிகளில் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பழக்கண்காட்சியும் நடத்தப்படுகிறது.
விழாவின் ஒரு பகுதியாக பழங்குடியின மக்களின் புகழ் பெற்ற பாரம்பரிய கலை நிகழ்ச்சி நடைபெறுகின்றது.












Click it and Unblock the Notifications