மதுரை பேருந்துகளில் வெடிகுண்டு சோதனை: மக்கள் பீதி
Subscribe to Oneindia Tamil

மதுரை பேருந்தில் வெடிகுண்டு இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து மதுரையில் இருந்து பல்வேறு இடங்களுக்குச் செல்லும் அனைத்து பேருந்துகளிலும் திருமங்கலம் போலீசார் மோப்ப நாய்கள் துணையுடன் அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள்.
மேலும் மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் இருந்து திருமங்கலம் வழியாகச் செல்லும் அனைத்து பேருந்திகளிலும் போலீசார் சோதனை நடத்தினர். இந்த அதிரடி சோதனைகளால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் மதுரை அண்ணா நகரில் சைக்கிள் வெடிகுண்டு வெடித்துள்ள நிலையில் தற்போது நடத்தப்படும் சோதனைகளால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications