அமைச்சர் சி.வி.சண்முகம் வீடு அருகே துண்டிக்கப்பட்ட தலை சிக்கியது... முண்டம் எங்கே?
Subscribe to Oneindia Tamil

தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக இருப்பவர் சி.வி.சண்முகம். இவரது வீடு திண்டிவனத்தில் உள்ளது. இவரது வீட்டுக்கு அருகே காந்தி சிலை ஒன்று உள்ளது. அந்த சிலைக்கு அருகே ஓடும் கால்வாயில் ஒரு தலை கிடந்தது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
உடனடியாக பொதுமக்கள் போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். பதறிப் போன போலீஸார் விரைந்து வந்தனர். அந்த தலையை மீட்டுள்ளனர். உடல் எங்கே என்று தெரியவில்லை.
இது யாருடைய தலை, கொலை எங்கே நடந்தது, கொலைக்கான காரணம் எதுவும் தெரியவில்லை.
அமைச்சர் வீட்டுக்கு அருகிலேயே கொலே செய்யப்பட்டவரின் தலையை வீசி விட்டுச் சென்ற செயல் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications