உள்துறை அமைச்சகம் காழ்ப்புணர்ச்சியோடு செயல்படுகிறது: டெல்லி மாநாட்டில் ஜெயலலிதா கடும் தாக்கு

டெல்லியில் நடைபெற்ற தேசிய தீவிரவாத தடுப்பு மையம் தொடர்பான மாநில முதல்வர்கள் கூட்டத்தில் ஜெயலலிதா பேசியதாவது:
உள்துறை அமைச்சகத்தின் காழ்ப்புணர்ச்சி
தேசிய தீவிரவாத தடுப்பு மையம் அமைப்பது குறித்து மத்திய அரசு தன்னிச்சையாகவே அறிவித்தது. இந்த அமைப்பில் மத்திய உளவுத்துறையான ஐ.பி.யின் ஆதிக்கமே அதிகம் இருக்கிறது. இதனால் மற்ற புலனாய்வு அமைப்புகளுடன் மோதல் போக்குதான் ஏற்படும்.
தேசிய தீவிரவாத தடுப்பு மையம் குறித்து மாநில அரசுகளுடன் உள்துறை அமைச்சகம் கலந்து ஆலோசிக்கவில்லை. இதன் உத்தரவு நகலைக் கூட தமிழக அரசுக்கு அனுப்பாமல் அவ்வளவு காழ்ப்புணர்ச்சியோடு மத்திய உள்துறை அமைச்சகம் செயல்படுகிறது. ஒடிசா முதல்வ நவீன்பட்நாயக் வைத்திருந்த நகலின் மூலமே எங்களுக்கு இந்த விஷயமே தெரியவந்தது. இது உள்துறை அமைச்சகத்தின் அலட்சியப் போக்கையே வெளிப்படுத்துகிறது.
உளவு அமைப்பிடம் ஒருங்கிணைப்பு இல்லை
தீவிரவாத தடுப்பு விஷயத்தில் அனைத்து உளவு அமைப்புகளும் அனைத்து மாநில அரசுகளும் ஒருங்கிணைந்து செயல்படவேண்டும். ஆனால் நமது உளவு அமைப்புகளிடம் ஒருங்கிணைப்பு இல்லை என்பதே உண்மை. எல்லைப் பகுதியில் போதிய தகவல்களைப் பெறாததால் கார்கில் போர் நிகழ்ந்தது. பொதுமக்களிடம் போதுமான தகவல்களை சேகரிக்க முடியாமல் போனதால்தான் 2008-ல் மும்பை தாக்குதல் நடந்தது.
பயனற்ற என்.சி.டி.சி.
தற்போதைய வடிவத்தில் தேசிய தீவிரவாத தடுப்பு மையம் அமைக்கப்பட்டால் அது தீவிரவாதிகளுக்குத்தான் சாதகமாக அமையும். எல்லைகளி, கடலோரங்களில் மாநில அரசுகளுடன் தகவல் பரிமாற்றம் அவசியமானதாகும். தீவிரவாத செயல் தொடர்பாக உள்ளூர் மக்கள் தகவல் தந்தால் அவர்களுக்கு தாராளமாக சன்மானம் வழங்கப்பட வேண்டும். அதற்கு மாநிலப் புலனாய்வு அமைப்புகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்பட வேண்டும்.
தீவிரவாத நடவடிக்கைகள் பற்றி தகவல் கிடைத்தால் உடனடியாக மாநில காவல்துறைதான் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாறாக மத்திய அரசின் அனுமதிக்காக காத்திருப்பது என்பது தீவிரவாதத்துக்கு துணை போவதாகிவிடும்.
முதல்வர்கள் குழு
எனவே தற்போதைய வடிவத்திலான தேசிய தீவிரவாத் தடுப்பு மையத்தை நிறுத்தி வைக்கவேண்டும். தீவிரவாத எதிர்ப்பு தொடர்பான யுக்திகளை வரையறுக்க முதலமைச்சர்கள் அடங்கிய குழு ஒன்றை முதலில் அமைக்க வேண்டும். இந்தக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில், ஆலோசனையின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றார் அவர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications