ஐ.ஏ.எஸ். தேர்வில் நெல்லை மாணவர் வெற்றி-ஏழைகளுக்கு சேவை செய்வதே லட்சியம்

Subscribe to Oneindia Tamil

IAS
நெல்லை: ஐ.ஏ.எஸ். தேர்வில் நடுப்பூலாங்குளத்தைச் சேர்ந்த செந்தில் குமார் என்பவர் வெற்றி பெற்றுள்ளார்.

நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள நடுப்பூலாங்குளத்தைச் சேர்ந்தவர் மதியழகன். அவர் அடைக்கலபட்டினம் மின்வாரியத்தில் வசூல் ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். அவரது மகன் செந்தில் குமார். அவர் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார். நாடு முழுவதும் 910 பேர் தேர்வு பெற்றுள்ள நிலையில் செந்தில்குமார் 544வது இடத்தைப் பிடித்துள்ளார்.

செந்தில் குமார் 8ம் வகுப்பு வரை பூலாங்குளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியிலும், 9ம் வகுப்பு முதல் பிளஸ் டூ வரை மாதாப்பட்டினம் எஸ்.எஸ்.வி. மேல்நிலைப்பள்ளியிலும் படித்தார். எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ் டூவில் பள்ளியில் முதலிடத்தை பிடித்தார்.

இதையடுத்து திருமங்கலம் அரசு ஹோமியோபதி மருத்துவ கல்லூரியில் மருத்துவ படிப்பை முடித்தார். கடந்த ஆண்டு ஐ.ஏ.எஸ். தேர்வில் முதல் நிலை தேர்வு, முதன்மை தேர்வுகளில் வெற்றி பெற்றார். ஆனால் நேர்முக தேர்வில் தேர்ச்சி பெறவில்லை. இருப்பினும் விடாது முயற்சி செய்து படித்து இந்த ஆணடு இலக்கை அடைந்தார்.

இது குறித்து செந்தில்குமார் கூறுகையில்,

சாதாரண கிராமத்தில் பிறந்து மேல்நிலை கல்வி வரை தமிழ் வழியில் படித்தேன். எனது பெற்றோரின் ஆசிர்வாதம் மற்றும் ஊக்கமே வெற்றிக்கு காரணம். ஐ.ஏ.எஸ். தேர்வில் தேர்ச்சி பெற்று ஏழைகளுக்கு சேவை செய்ய வேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசை. அதற்காக தீவிரமாக முயற்சித்தேன். தற்போது பலன் கிடைத்துள்ளது மகிழ்ச்சியாக உள்ளது என்றார்.

செந்தில் குமாரின் தாய் கனகவள்ளி பீடி சுற்றும் தொழிலாளி. தம்பி ரவிசந்திரன் எம்.பி.பி.எஸ். முடித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+