திருச்செந்தூர் கோவிலுக்கு ரூ.70 லட்சத்தில் தங்க கதவு வழங்கிய சிருங்கேரி சாமிகள்

Subscribe to Oneindia Tamil

Tiruchendur
திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி் கோவில் மூலஸ்தானத்தில் உள்ள வாயிலுக்கு ரூ.70 லட்சம் செலவில் தங்கம் முலாம் பூசப்பட்ட கதவுகளை சிருங்கேரி சாமிகள் வழங்கினார்.

சிருங்கேரி 36வது பீடாதிபதி பாரதி தீர்த்த சாமி அறுபடை வீடுகளில் 2ம் படை வீடான திருச்செந்தூருக்கு வருகை தந்தார். அவருக்கு அங்குள்ள சிருங்கேரி மடம் முன் திரிசுந்தரர்கள் சார்பில் பூர்ண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. தொடர்ந்து சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு வருகை தந்த அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் தங்க குடத்தால் பூர்ண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து கோவில் மூலஸ்தானத்தில் உள்ள வாயிலுக்கு சிருங்கேரி மடம் சார்பில் ரூ.70 லட்சம் மதிப்பில் வழங்கப்பட்ட அறுபடை வீடுகளின் முருகன் திருக்கோலம் பொறிக்கப்பட்ட தங்க முலாம் பூசப்பட்ட கதவுகள் பொருத்தப்பட்டது. இதற்கான தங்க முலாம் பூசப்பட்ட சாவிகளை கோவில் தக்கார் கோட்டை மணிகண்டன், இணை ஆணையர் சுதர்சனிடம் சாமி வழங்கினார்.

தொடர்ந்து தங்க கதவுகளை சிருங்கேரி சாமிகள் திறந்து வைத்து மூலவருக்கு 108 தங்க மலர்களால் அர்ச்சனை செய்து உதயமார்த்தாண்ட தீபாராதனை காட்டினார். இதில் உதவி ஆணையர் செல்லத்துரை, உள்துறை கண்காணிப்பாளர் வெங்கடேசன், ராமசாமி மற்றும் திரிசுதந்தரர்கள் கலந்து கொண்டார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+