பணக்காரர்களுக்காக மட்டுமே வரிந்து கட்டி வரும் ரோம்னி-ஒபாமா தாக்கு

ஒஹையோ மாநில பல்கலைக்கழக அரங்கில் நடந்த கூட்டத்தில் ஒபாமா தனது பிரசாரத்தைத் தொடங்கிப் பேசினார்.
அவர் பேசுகையில், பணக்காரர்களுக்காக வரிந்து கட்டிக் கொண்டு கிளம்பியுள்ளார் ரோம்னி. அவருக்கு ஏழைகள் குறித்துக் கவலை இல்லை. பணக்காரர்களுக்கு வரிகளைக் குறைப்பதற்கும், அவர்கள் சவுகரியமாக இருப்பதிலும் ஆர்வமாக இருப்போர்தான் ரோம்னியை முன்னிறுத்துகின்றனர். சராசரி அமெரிக்கர்கள் குறித்து ரோம்னியோ அல்லது அவரை முன்னிறுத்தியுள்ள குடியரசுக் கட்சியினரோ கவலைப்படுவதில்லை. அவர்களின் முயற்சி நிச்சயம் வெற்றி பெறாது.
அவுட்சோர்சிங், வரி தவிர்ப்பு உள்ளிட்ட எதுகுறித்தும் ரோம்னிக்கு சரியான புரிந்துணர்வு கிடையாது. எது சராசரி அமெரிக்கர்களுக்கும், அமெரிக்கப் பொருளாதாரத்துக்கும் நல்லது என்பதே அவருக்குத் தெரியவில்லை என்றார் ஒபாமா.
ஒஹையோ கூட்டத்தை முடித்து விட்டு விர்ஜீனியாவில் தனது 2வது பிரசாரக் கூட்டத்தை நடத்துகிறார் ஒபாமா.
ஒபாமாவின் பேச்சை ஆயிரக்கணக்கானோர் கூடி கேட்டனர். 2வது முறையாக அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஒபாமா, இந்த முறை பார்வர்ட் என்ற கோஷத்தை முன்வைத்துள்ளார் என்பது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications