சர்கோஸிக்கு மாபெரும் தோல்வி.. பிரெஞ்சு அதிபரானார் பிரான்காய்ஸ் ஹோலன்ட்
பாரீஸ்: பிரான்ஸ் அதிபர் தேர்தலில் தற்போது அதிபர் நிக்கோலஸ் சர்கோஸி தோல்வி அடைந்து விட்டார். எதிர்க்கட்சியான சோசலிச கட்சியின் வேட்பாளராக நிறுத்தப்பட்ட பிரான்காய்ஸ் ஹோலன்ட் மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளார். இதன் மூலம் 1995க்குப் பின்னர் சோசலிச கட்சியின் சார்பில் அதிபராகும் முதல் தலைவர் என்ற பெருமை அவருக்குக் கிடைக்கிறது.
முதல் சுற்றுத் தேர்தலில் முதலிடத்தைப் பிடித்து சர்கோஸியின் முடிவை கட்டியம் கூறிய ஹோலன்ட், நேற்று நடந்த 2வது சுற்றுத் தேர்தலில் 51.9 சதவீத வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். சர்கோஸிக்கு 48.1 சதவீத ஓட்டுக்களே கிடைத்தன.
கருத்துக் கணிப்புகளிலும் ஹோலன்டே முன்னணியில் இருந்து வந்தார். அவரது வெற்றியை ஹோலன்டின் ஆதரவாளர்கள் பாரீஸில் விமரிசையாக கொண்டாடி மகிழ்ந்தனர்.
பிரான்ஸின் பொருளாதார அவல நிலை, மக்களுக்கு சர்கோஸி மீது நிலவி வரும் வெறுப்பலை ஆகியவற்றைப் பயன்படுத்தி பெரும் வெற்றியைப் பெற்றுள்ளார் ஹோலன்ட் என்பது குறிப்பிடத்தக்கது.
மே 14 அல்லது 15ம் தேதியன்று அதிபராக ஹோலன்ட் பதவியேற்பார்.
புதிய அதிபர் ஹோலன்டுக்கு அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா முதல் ஆளாக வாழ்த்துக் கூறினார். பல்வேறு உலகத் தலைவர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications