மேட்டூர் அருகே சந்தன கடத்தல் வீரப்பனின் சமாதியை தோண்டிய மர்ம நபர்கள்!

Subscribe to Oneindia Tamil

Veerappan
மேட்டூர்: மேட்டூர் அருகே மூலக்காட்டில் அடக்கம் செய்யப்பட்டுள்ள சந்தன கடத்தல் வீரப்பனின் சமாதி தோண்டப்பட்டதால் திடீர் என்று பரபரப்பு ஏற்பட்டது.

வீரப்பன் கடந்த 2004ம் ஆண்டு அக்டோபர் 18ம் தேதி தர்மபுரி அருகே தமிழக அதிரடிப்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது உடல் மேட்டூர் அருகே உள்ள மூலக்காடு என்ற இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

காவிரிக் கரையோரத்தில் இருக்கும் அவரது சமாதிக்கு வெளியூர்களில் இருந்தும் ஏராளமான பொதுமக்கள் வந்து வேடிக்கை பார்த்துவிட்டு செல்வது வழக்கம். சிலர், சமாதியில் இருந்து மண்ணை எடுத்து செல்வதும் உண்டு.

மேலும், ஒவ்வொரு ஆண்டும் வீரப்பனின் நினைவு நாளில் அவரது மனைவி முத்துலட்சுமி, மகள்கள் பிரபாவதி, வித்யாராணி மற்றும் உறவினர்கள் சமாதிக்கு வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

வீரப்பனின் ஆதரவாளர்களும் சமாதிக்கு வந்து அஞ்சலி செலுத்திவிட்டு உறுதிமொழி எடுத்து செல்வார்கள்.

இந் நிலையில் இரு தினங்களுக்கு முன் வீரப்பனின் சமாதி தோண்டப்பட்டிருந்தது. சமாதியின் மீது சுமார் ஒன்றரை அடி உயரத்தில் குவிக்கப்பட்டிருந்த மண் முழுவதும் அகற்றப்பட்டிருந்தது.

இது குறித்து தகவல் பரவியதும் வீரப்பனின் உறவினர்களும், பொதுமக்களும் அங்கு திரண்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+