For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கலப்பு திருமணம் செஞ்சா வெட்டி தள்ளுங்க...: காடுவெட்டி குரு பேச்சுக்கு எதிராக வழக்கு

By Mathi
Google Oneindia Tamil News

Kaduvetti Guru
சென்னை: கலப்புத் திருமணம் செய்வோரை வெட்டித் தள்ளுங்க என்று பேசிய வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குரு மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் அய்யப்பன்தாங்கலைச் சேர்ந்த வாராகி என்பவர் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

தமிழக அரசு கலப்பு திருமணத்தை ஆதரித்து சட்டம் இயற்றியுள்ளது. இந்திய அரசியல் அமைப்பு சட்டத்திலும் கலப்பு திருமணத்துக்கு இடமுள்ளது. ஆனால் கடந்த 5ம் தேதி பா.ம.க. மற்றும் வன்னியர் சங்கத்தின் சார்பில் மகாபலிபுரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய காடுவெட்டி குரு கலப்புத் திருமணத்துக்கு எதிராகப் பேசியுள்ளார்.

"வன்னியர் இனத்து பெண்களை, வேறு சாதியைச் சேர்ந்த ஆண்கள் யாராவது திருமணம் செய்தால் அவர்களை வெட்டித் தள்ளுங்க, நான் சொல்றேன்'' என்று குரு பேசியிருக்கிறார். இவரது பேச்சு இந்திய தண்டனை சட்டத்தின் 504, 505(1)(சி), 505(2) ஆகிய பிரிவுகளின் கீழ் தண்டனைக்கு உரியதாகும். குறிப்பாக தாழ்த்தப்பட்ட, பழங்குடி மக்களின் உயிருக்கும் கலப்பு திருமணத்தை ஆதரிப்போரின் உயிருக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. இதனால் அவர் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
A public interest petition filed in the Madras High court to take action on Vanniyar Sangam leader Kaduvetti Guru' for his speech against inter-caste marriage system.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X