கணிதத்தில் 2656 பேர் 200க்கு 200!
சென்னை: பிளஸ்டூ கணிதப் பாடத்தில்தான் அதிக அளவிலான மாணவ, மாணவியர் 200க்கு 200 எடுத்துள்ளனர்.
பிளஸ்டூ தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின. அதில் கணிதப் பாடத்தில்தான் அதிக அளவிலான மாணவ, மாணவியர்200க்கு 200 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
மொத்தம் 2656 மாணவ, மாணவியர் 200க்கு 200 மதிப்பெண்களை அள்ளியுள்ளனர்.
அடுத்து வேதியியல் பாடத்தில் 1444 பேரும், உயிரியல் பாடத்தில் 620 பேரும், கணிப் பொறியியலில் 618 பேரும் 200க்கு 200 பெற்றுள்ளனர்.
இயற்பியலில் பெரும் சரிவு
இயற்பியல் பாடத்தில் இந்த ஆண்டு வெறும் 142 பேர் மட்டுமே சதம் போட்டுள்ளனர். ஆனால் கடந்த ஆண்டு இப்பாடத்தில் 646 பேர் சதம் போட்டு அசத்தியிருந்தனர். இதில் பெரும் சரிவை இந்த ஆண்டு மாணவர்கள் சந்தித்துள்ளனர்.
அக்கவுண்டன்சியில் 2518 பேர் சதம்
அதேபோல அக்கவுண்டன்சியில் மாநிலத்தில் மொத்தம் 2518 மாணவ, மாணவியர் 200க்கு 200 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications