+2 தேர்வு: முதலிடத்தில் ஒரு மாணவரும் இல்லை - என்னாச்சுப்பா சென்னைக்கு?

சென்னையில் இல்லாத வசதி வேறு எங்கும் இல்லை என்று தாராளமாக கூற முடியும். காரணம் அத்தனை பள்ளிகளும் கிட்டத்தட்ட நல்ல வசதியுடன்தான் இருக்கின்றன. நல்ல ஆசிரியர்களும் நிறையவே உள்ளனர். ஆனாலும் முதல் மூன்று இடங்களைப் பிடிக்க சென்னை மாணவ, மாணவியர் கடுமையாக தடுமாறும் நிலை சமீப காலமாக ஏற்பட்டுள்ளது.
சென்னையைத் தாண்டி உள்ள மாணவ மாணவியர்தான் கடந்த சில ஆண்டுகளாக ஸ்கோர் செய்து வருகின்றனர். இந்த விஷயத்தில் தற்போது சென்னை பின்னுக்குத் தள்ளப்பட்டு விட்டது.
ஒரு காலத்தில் முதலிடம் என்றாலே அது ஏதோ ஒரு சென்னைப் பள்ளியாகத்தான் இருக்கும். ஆனால் இன்று நிலைமை தலைகீழாகி விட்டது. நாமக்கல், நெல்லை உள்ளிட்ட வெளி மாவட்ட மாணவ, மாணவியரே தொடர்ந்து முதலிடத்தைப் பிடித்து வருகின்றனர்.
இந்த ஆண்டு சென்னைக்கு பேரதிர்ச்சி கிடைத்துள்ளது. சென்னையைச் சேர்ந்த ஒரு மாணவர் கூட முதல் மூன்று இடங்களில் வரவில்லை. முதல் மூன்று இடத்தைப் பிடித்துள்ள மாணவ, மாணவியர் எண்ணிக்கை மொத்தம் 6 பேராகும். இந்த ஆறு பேருமே நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை பள்ளி மாணவர்கள் சரியாக படிப்பதில்லையா அல்லது அவர்களுக்கு என்ன பிரச்சினை என்பது உண்மையிலேயே கவலைக்குரிய ஒன்று. மாணவர்களின் கவனச் சிதறல், தேவையில்லாத பழக்க வழக்கங்கள், படிப்பதில் ஆர்வமின்மை, பள்ளிகளில் போதனா முறையில் உள்ள கோளாறு என பல காரணங்களை சென்னையின் தோல்விக்குக் காரணமாக கூற முடியும்.
சென்னையைப் பொறுத்தவரை பல பள்ளிகளில் நல்ல ஆசிரியர்கள் இருந்தாலும் கூட டியூஷன் என்ற அரக்கன் உள்ளே புகுந்து மாணவ, மாணவியரை சீர்குலைப்பதாக கூறப்படுகிறது. பெரும்பாலான தனியார் பள்ளிகளில் மாணவ, மாணவியர்கள் பள்ளிகளில் படிப்பதை விட டியூஷனில்தான் அதிகம் படிக்க அட்வைஸ் செய்யப்படுவதாக ஒரு குற்றச்சாட்டு உள்ளது. இதனால் பொருள் விரயம்தான் ஆகிறதே தவிர மாணவ, மாணவியரின் கல்விதரம் உயர்ந்ததாக தெரியவில்லை என்பதையே தற்போதைய ரிசல்ட் காட்டுகிறது.
இந்தக் கோளாறுகளை உடனடியாக நீக்கிச் சரி செய்ய அத்தனை பள்ளிகளும் ஒட்டுமொத்தமாக முயல வேண்டும். இல்லாவிட்டால் சென்னை பள்ளிகள் முதலிடத்தைப் பிடிப்பது என்பது கனவாக மாறி விடும் அபாயம் உள்ளது.
-
சென்னையில் ரூ.7000-லிருந்து ரூ.0 ஆக மாறிய புதிய மெத்தை.. குப்பைக்கு வந்த ரியல் கதை -
ஒரு ஓட்டு வித்தியாசத்தில் தவெக எம்எல்ஏ வென்ற விவகாரம்: சென்னை ஐகோர்ட்டில் பெரியகருப்பன் புதிய வழக்கு -
காசிமேட்டில் நள்ளிரவு 12 மணிக்கு ஒலித்த சைரன்.. சென்னையில் வஞ்சிரம் மீன் பிரியர்களுக்கு பேரதிர்ச்சி? -
கோட்டைக்கு வரும் புது மாப்பிள்ளை.. மணமகன் தேடும் இளம் பெண் அமைச்சர்.. ஜோதிடர்களுடன் தீவிர ஆலோசனை! -
தமிழ்நாடு சைடில் நிலம் கிடைப்பதில் சிக்கல்.. பெங்களூர்-சென்னை எக்ஸ்பிரஸ்வே திட்டம் தாமதம்.. போச்சு -
“தற்போதைய மின் தடைக்கு கடந்த ஆட்சியே காரணம்”.. அமைச்சர் நிர்மல் குமார் கொடுத்த விளக்கம்! -
'அமரன்' மேஜர் முகுந்த் வரதராஜனுக்கு பெருமை சேர்த்த சென்னை! பிரதான சாலைக்கு பெயர் சூட்டி அதிரடி! -
3 லட்சம் சதுரடி! வருது 13 மினி மால்.. சென்னை மெட்ரோ 2ம் கட்ட ஸ்டேஷன்களில் சுவாரசியம்! தரமான பிளானிங் -
சென்னையில் சம்பவம் இருக்கு.. ஹை அலர்ட் கொடுத்த வானிலை மையம்! உஷார் மக்களே! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான்












Click it and Unblock the Notifications