2014 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக வெல்ல கத்காரி முன்வைத்த 3 'மந்திரங்கள்'!
மும்பை: எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாய்கக் கூட்டணி வெற்றி பெற 3 மந்திரங்களை பாஜக தலைவர் நிதின்கத்காரி முன்வைத்திருக்கிறார்.
மும்பையில் நடைபெற்ற தேசிய செயற்குழுக் கூட்டத்தில் பேசிய கத்காரி, தேசிய ஜனநாயகக் கூட்டணியை விரிவாக்கம் செய்வது, பாஜகவின் வாக்கு வங்கியை 10 விழுக்காடு அதிகரிப்பது, சிறுபான்மையினர் மற்றும் தலித்துகளிடையே நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் செயற்பாடுகளை உருவாக்குதல் என்பனதுதான் 2014-ம் ஆண்டு தேர்தலுக்கான மந்திரம் என்றார்.
இதனை செய்தியாளர்கள் கூட்டத்தில் தெரிவித்த பாஜக செய்தித் தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத், தற்போதைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசை கவிழ்க்கும் எண்ணத்துடன் பாஜக செயல்படவில்லை.. காரணம் தற்போதைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு விரைவில் தானாகவே கவிழ்ந்துவிடும் என்றும் கதாரி கூறியதாகத் தெரிவித்தார்.
மேலும் வரும் 31-ந் தேதி நடைபெற உள்ள பாரத் பந்துக்கு அழைப்பு விடுத்துள்ள அத்வானியின் அறிக்கையையும் ரவிசங்கர் பிரசாத் செய்தியாளர்களிடம் வசித்தார்.
மோடி விவகாரம்
பாஜகவின் தேசிய செயற்குழுக் கூட்டமானது நாட்டின் பிரதான பிரச்சனைகளை எதிர்கொள்வதற்கு முன்பாக உட்கட்சி மோதல்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டிய நிலை உருவானது. கத்காரியின் ஆதரவாளரான சஞ்சய் ஜோஷி தேசிய செயலர் பொறுப்பிலிருந்து விலகியதையடுத்தே தாம் தேசிய செயற்குழுவில் பங்கேற்கப் போகிறேன் என்று குஜராத் முதல்வர் மோடி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications