டி.என்.ஏ. சோதனைக்கு ரத்தம் கொடுக்கனும்: என்.டி.திவாரிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
டெல்லி: என்.டி. திவாரியை தந்தை உரிமை கோரும் வழக்கில் 29-ந் தேதிக்குள் மரபணு பரிசோதனைக்காக ரத்த மாதிரியை என்.டி.திவாரி கொடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முதுபெரும் காங்கிரஸ் தலைவரான என்.டி.திவாரியை தமது தந்தை என்று உரிமை கோரி ரோகித் சேகர் என்பவர் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கில் மரபணு பரிசோதனைக்காக ரத்த மாதிரியை என்.டி. திவாரி கொடுக்க டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் திவாரி முறையீடு செய்திருந்தார்.
இதை விசாரித்த உச்சநீதிமன்றம் வரும் 29-ந் தேதிக்குள் என்.டி. திவாரி ரத்த மாதிரியை கொடுத்தாக வேண்டும் என்று உத்தரவிட்டது.
மேலும் இதற்காக திவாரி டெல்லிக்கு வராமல் டேராடூனில் உள்ள அவரது இல்லத்தில் இருந்தாலே போதுமம் என்றும் கூறப்பட்டுள்ளது. டேராடூன் நீதிபதி உத்தரவுப்படி போலீசார் மற்றும் டாக்டர் குழுவுடன் திவாரியின் இல்லத்திற்கே சென்று ரத்த மாதிரியை எடுக்க வேண்டும் என்பதும் உச்சநீதிமன்ற நீதிபதிகளின் உத்தரவு.












Click it and Unblock the Notifications