ரசிய மொழியையும் ஆட்சிமொழியாக்க எதிர்ப்பு- உக்ரெய்ன் நாடாளுமன்றத்தில் எம்.பிக்களிடையே அடிதடி
கிய்வ்: உக்ரெய் நாட்டு ஆட்சி மொழியாக ரசிய மொழியையும் இடம்பெறச் செய்வது தொடர்பாக மசோதாவை நிறைவேற்ற கடும் எதிர்ப்புக் கிளம்பிய நிலையில் எம்.பி.க்கள் அடிதடியில் ஈடுபட்டதால் அந்நாட்டு நாடாளுமன்றம் போர்க்களமானது.
சோவியத் ரஷ்ய கூட்டமைப்பிலிருந்து பிரிந்த நாடுகளில் ஒன்று உக்ரெய்ன். இந்நாட்டில் 30 முதல் 50 விழுக்காட்டின் ரசிய மொழியை தாய்மொழியாகக் கொண்டவர்கள் என்று கூறப்படுகிறது. ரசியாவை ஒட்டிய நாடும் கூட. ஆனால் இங்கு உக்ரெய்ன் மொழிதான் ஆட்சிமொழியாக இருந்து வருகிற்து.
2010- தேர்தலின் போது தேர்ந்தெடுக்கப்பட்ட தற்போதைய அதிபர் விக்டோர் யன்கோவ்யொச், ரசிய மொழியையும் உக்ரெய்ன் நாட்டின் ஆட்சிமொழியாக்குவதாக உறுதியளித்திருந்தார்.
இதைத் தொடர்ந்து அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நேற்று மாலை இதற்கான மசோதா கொண்டுவரப்பட்டது. இதற்கு ஒருதரப்பு எம்.பிக்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். இது இணக்கமாக வாழும் சமூகத்தினரிடையே பிளவை ஏற்படுத்தும் என்று குரல் எழுப்பினர் .இதைத் தொடர்ந்து ஆதரவு மற்றும் எதிர்ப்பு எம்.பிகக்ள் இடையே மோதல் ஏற்பட்டது. நம்மூர் சட்டப்பேரவை நடவடிக்கைகளை மிஞ்சும் வகையில் சட்டையை கிழித்து முகத்தில் ரத்தம் வடிய மோதிக் கொண்டனர்.












Click it and Unblock the Notifications