மும்பையில் ரூ. 1000 கோடியில் 6000 சிசிடிவி கேமராக்களை பொருத்துகிறது ரிலையன்ஸ்
Subscribe to Oneindia Tamil

மும்பையில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய பிறகு நகரின் முக்கிய சந்திப்புகளில் சிசிடிவி கேமராக்களை பொறுத்த மஹாராஷ்டிர அரசு முடிவு செய்ததது. இதற்கான டெண்டரும் விடப்பட்டிருந்தது. மொத்தம் 6 ஆயிரம் சிசிடிவி கேமராக்கள் பொருத்த திட்டமிடப்பட்டிருந்தது.
10க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் டெண்டரில் இடம்பெற்றிருந்தபோதும் குறைந்த விலைக்குக் கோரியதால் ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு தற்போது இந்த ஆர்டர் கொடுக்கப்பட்டிருக்கிறது.
நாசாவில் பணிபுரிந்த விவேக் லால், ரிலையன்ஸில் இணைந்த பிறகு உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் ஏரோஸ்பேஸ் வர்த்தகத்திலும் ரிலையன்ஸ் கால் பதித்து வருகிறது. இருப்பினும் சிசிடிவி கேமிராக்களை குறைந்த செலவில் நிறுவன ஒப்புக் கொண்டது பற்றி விவேக் லால் கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை.












Click it and Unblock the Notifications