டி.என்.ஏ. சோதனைக்காக ரத்த மாதிரி கொடுத்த 'உட்டாலக்கடி' என்.டி. திவாரி
டேராடூன்: மரபணு சோதனைக்காக முன்னாள் ஆந்திர ஆளுநர் என்.டி. திவாரி இன்று தனது ரத்த மாதிரியைக் கொடுத்தார்.
முதுபெரும் காங்கிரஸ் தலைவரும், முன்னாள் ஆந்திர ஆளுநருமான என்.டி.திவாரியை(86) தமது தந்தை என்று உரிமை கோரி ரோகித் சேகர் (32) என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் மரபணு பரிசோதனைக்காக ரத்த மாதிரியை என்.டி. திவாரி கொடுக்க டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதை எதிர்த்து அவர் உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்திருந்தார்.
இதை விசாரித்த உச்ச நீதிமன்றம் மே 29ம் தேதிக்குள் என்.டி. திவாரி ரத்த மாதிரியை கொடுத்தாக வேண்டும் என்று உத்தரவிட்டது. மேலும் இதற்காக திவாரி டெல்லிக்கு வராமல் டேராடூனில் உள்ள அவரது இல்லத்தில் இருந்தாலே போதும் என்றும் கூறப்பட்டது. டேராடூன் நீதிபதி உத்தரவுப்படி போலீசார் மற்றும் டாக்டர் குழுவுடன் திவாரியின் இல்லத்திற்கே சென்று ரத்த மாதிரியை எடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் உத்தரவிட்டனர்.
இதையடுத்து இன்று 2 டாக்டர்கள் அடங்கிய குழு டேராடூனில் உள்ள திவாரியின் வீட்டுக்கு சென்று ரத்த மாதிரி எடுத்தது. அப்போது மனுதாரர் ரோஹித் சேகரும், அவரது தாயும் அங்கிருந்தனர். இதனால் திவாரியின் வீட்டுக்கு வெளியே பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
திவாரி தான் தனது தந்தை என்று சேகர் தொடர்ந்த இந்த வழக்கு திவாரி ரத்த மாதிரி கொடுக்க மறுத்ததால் கடந்த 4 ஆண்டுகளாக இழுத்துக் கொண்டே போனது என்பது குறிப்பிடத்தக்கது. மரபணு பரிசோதனை முடிவு வந்தால் திவாரி குற்றமற்றவரா இல்லையா என்பது தெரிந்துவிடும்.












Click it and Unblock the Notifications