சென்னையில் டெங்கு காய்ச்சல் பாதித்து சப் இன்ஸ்பெக்டர் மகள் பலி

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போலீஸ் சப் இன்ஸ்பெக்டரின் மகள் சிகிச்சை பலனின்றி பலியானார்.

தமிழகத்தில் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமாரி என்று தென் மாவட்டங்களில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இதுவரை 42 பேர் பலியாகி உள்ளனர். மேலும் பலருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பதாக தெரிய வந்துள்ளது. இந்த நிலையில் சென்னையில் இளம்பெண் ஒருவர் டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்டு பலியாகி உள்ளார்.

சென்னை கிண்டியில் போக்குவரத்து போலீஸ் சப் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் காசிநாதன். இவரது மகள் மஞ்சுளா(29). மஞ்சளாவுக்கு கடந்த வாரம் முதல் காய்ச்சல் இருந்தது.

இதனையடுத்து அண்ணா நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு நடத்திய மருத்துவ பரிசோதனையில் அவருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது தெரியவந்தது. இந்த நிலையி்ல நேற்று இரவு சிகிச்சை பலனின்று மஞ்சுளா இறந்தார்.

தமிழகத்தின் தென் மாவட்டங்களில் டெங்கு காய்ச்சலை தடுக்க, சுகாதாரத் துறை அதிகாரிகள் தகுந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+