பல்கலை ஊழியர் மனைவியுடன் ஊர் ஊராக உல்லாசம்.. பலாத்காரம்: பாலிடெக்னிக் ஆசிரியர் கைது
Subscribe to Oneindia Tamil
சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக ஊழியர் மனைவியை வெளியூர்களுக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக பாலிடெக்னிக் ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அண்ணாமலை பல்கலைக்கழக குடிநீர் வழங்கல் துறையில் பணியாற்றி வரும் இந்திரகுமார் சிதம்பரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரில்,
எனது மனைவி விஜயலட்சுமியை சீர்காழியில் உள்ள ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் ஆசிரியராக பணியாற்றி வரும் ஜவகர் என்ற கமல்ராஜ் (32) என்பவர் ஆசை வார்த்தை கூறி வேளாங்கண்ணி, மயிலாடுதுறை போன்ற இடங்களுக்கு அழைத்து சென்று அறை எடுத்து தங்கி கற்பழித்து விட்டார்.
அதற்கான ஆதாரம் உள்ளது. மேலும் என்னை கொலை செய்ய கூறி மனைவி விஜயலட்சுமியை தூண்டி விட்டுள்ளார் என்று கூறியிருந்தார்.
இதையடுத்து விசாரணை நடத்திய போலீசார் கமல்ராஜை கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications