காயிதே மில்லத்தின் 117வது பிறந்தநாள்: மதுசூதனன் தலைமையில் நினைவிடத்தில் மரியாதை செலுத்தும் அதிமுக

Subscribe to Oneindia Tamil

சென்னை: காயிதே மில்லத்தின் 117வது பிறந்தநாளை முன்னிட்டு வரும் 5ம் தேதி அவரது நினைவிடத்தில் அதிமுகவினர் மலர்ப் போர்வை போர்த்தி மரியாதை செலுத்தவிருக்கிறார்கள்.

இது குறித்து அதிமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத்தின் 117வது பிறந்த நாளை முன்னிட்டு, வரும் 5ம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று காலை 11 மணி அளவில் சென்னை, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை, வாலாஜா மசூதியில் அமைந்துள்ள கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் அவர்களுடைய நினைவிடத்தில் கழக அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் தலைமைக் கழக நிர்வாகிகளும், அமைச்சர் பெருமக்களும், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும் மலர்ப் போர்வை போர்த்தி மரியாதை செலுத்த உள்ளார்கள்.

நிகழ்ச்சியில் கழகம், எம்.ஜி.ஆர். மன்றம், ஜெயலலிதா பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்கம், வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப்பிரிவு, விவசாயப் பிரிவு, மீனவர் பிரிவு, மருத்துவ அணி, இலக்கிய அணி, அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி, இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை உட்பட கழகத்தின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளும், உள்ளாட்சி அமைப்புப் பிரதிநிதிகளும், கழக உடன் பிறப்புகளும், இஸ்லாமிய சகோதர, சகோதரிகளும் பெருந்திரளாகக் கலந்து கொண்டு, கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் இஸ்மாயில் சாஹிப் பிறந்த நாள் நிகழ்ச்சியை சிறப்பித்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+