புதுக்கோட்டை: கவுன்சிலர் உள்பட 100 அதிமுகவினர் மீது தேர்தல் விதிமீறல் வழக்கு

Subscribe to Oneindia Tamil

புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் தேர்தல் விதிமுறைகளை மீறிய 100 அதிமுகவினர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

புதுக்கோட்டை இடைத்தேர்தல் வரும் 12ம் தேதி நடக்கிறது. இதையொட்டி 32 அமைச்சர்கள் உள்பட 52 பேர் கொண்ட அதிமுக தேர்தல் பணிக் குழு புதுக்கோட்டையில் முகாமிட்டு பணியாற்றி வருகிறது. தேர்தலை முன்னிட்டு அதிமுக சார்பில் பல்வேறு இடங்களில் பூத் கமிட்டி அமைக்கப்பட்டு காரியாலயங்கள் திறக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் புதுக்கோட்டை காமராஜபுரம் 22வது வீதியில் அனுமதி இன்றி அதிமுக தேர்தல் காரியாலயம் திறக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தகவல் அறிந்த பறக்கும்படை தேர்தல் அலுவலர் மனோகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவரது புகாரின் பேரில் அதிமுக கவுன்சிலர் பாண்டிகுமார் உள்ளிட்ட 100 அதிமுகவினர் மீது கணேஷ் நகர் போலீசார் தேர்தல் விதிமீறல் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் வெற்றி பெற்றதைப் போன்று புதுக்கோட்டையிலும் வெற்றி வாகை சூட வேண்டும் என்ற முனைப்போடு அதிமுக செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+