அடுத்த வாரத்தில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.75 குறைய வாய்ப்பு!
டெல்லி: பெட்ரோல் விலையை கண்டித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வரும் நிலையில், அடுத்த வாரத்தில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.75 குறைய வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
கச்ச எண்ணெய் விலை உயர்வு மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி ஆகிய காரணங்களால் கடந்த வாரம் பெட்ரோல் விலையில் ரூ.7.54 உயர்த்தப்பட்டது. இதனால் நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. பாஜக தரப்பில் பாரத் பந்த் நடத்தப்பட்டது.
இந்த நிலையில் 124.37 அமெரிக்க டாலராக இருந்த கச்ச எண்ணெயின் விலை தற்போது சற்று சரிந்து 115.77 அமெரிக்க டாலர்களாகி உள்ளது. இதனால் அடுத்த வாரத்தின் துவக்கத்தில் பெட்ரோல் விலையில் லிட்டருக்கு ரூ.1.75 குறைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து நாட்டின் 3 பெட்ரோல் நிறுவனங்கள் வரும் 4 அல்லது 5ம் தேதி கூடி ஆலோசித்து முடிவு எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா தலைமையில் காங்கிரஸ் குழு வரும் 4ம் தேதி ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க உள்ளது. இதில் பெட்ரோல் விலை குறைப்பு குறித்து ஆலோசிக்கப்படும் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications