For Daily Alerts
Just In
மன்மோகன்சிங் மீது எதிர்க்கட்சிகள் வேண்டுமென்றே பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்துகின்றன: சோனியா
டெல்லியில் காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்துக்கு தலைமை வகித்து அவர் பேசியதாவது:
காங்கிரஸூக்கு எதிரான சக்திகளும் எதிர்க்கட்சிகளும் பிரதமருக்கு எதிராக தொடர்ந்து அவதூறுகளைப் பரப்பி வருகின்றன. அவை அனைத்துமே ஆதாரமற்றவை. நாட்டின் பொருளாதார நிலைமையானது நிச்சயம நமக்கு சவாலானாதுதான். ஆனால் காங்கிரஸ் அல்லாத மாநிலங்கள் மத்திய அரசு உருவாக்கும் கொள்கைகளை ஏற்க மறுத்து முரண்பாடான நிலையைக் கடைபிடித்து வருகின்றன.
மாநில சட்டப்பேரவைகளுக்கும் அடுத்த பொதுத்தேர்தலுக்கும் நம்மை நாம் தயார்படுத்திக் கொள்ள வேண்டிய தருணம் இது. நாம் நமது கட்சியை வளர்த்தால்தான் அதைப் போல் இரு மடங்கு பலனை எதிர்பார்க்க முடியும். எந்த ஒரு சவாலையும் எதிர்கொள்ள காங்கிரஸ் தொண்டர்கள் தயாராக இருக்க வேண்டும். நமக்குள் இருக்கும் கோஷ்டி மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றார் அவர்.
Comments
English summary
Congress president Sonia Gandhi on Monday attacked the opposition and civil society for levelling "baseless" allegations against Prime Minister Manmohan Singh, government and Congress.
Story first published: Monday, June 4, 2012, 14:23 [IST]