''சத்தம் போடக் கூடாது''... சிரஞ்சீவி மீது சரமாரியாக செருப்பு வீசிய காங்கிரஸார்!

ஆந்திராவில் 18 சட்டசபைத் தொகுதிகளுக்கும், ஒரு லோக்சபா தொகுதிக்கும் ஜூன் 12ம் தேதி இடைத் தேர்தல் நடைபெறுகிறது. இதில் வெற்றி பெற காங்கிரஸ் கடும் பிரயத்தனம் மேற்கொண்டுள்ளது.
தற்போதைய நிலையில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸே முன்னணியில் இருப்பதாக கூறப்படுகிறது.
நேற்று கர்னூல் மாவட்டம் எம்மிகலூரில் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து நடிகர் சிரஞ்சீவி, ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டி ஆகியோர் திறந்த வேனில் சென்று பிரச்சாரம் செய்தனர்.
சிரஞ்சீவி பேசிக் கொண்டிருந்தபோது மைக் வேலை பார்க்கவில்லை. இதனால் அவர் பேசுவது தொண்டர்களுக்குக் கேட்கவில்லை. இதனால் தொண்டர்கள் கோஷமிட்டனர். சத்தமாக பேசுமாறு கோரின்.
இதனால் டென்ஷன் ஆன சிரஞ்சீவி, யாரும் கோஷம் போடக் கூடாது, சத்தம் போடக் கூடாது. சத்தம் போட்டால் நான் பேச மாட்டேன், போய் விடுவேன் என்றார்.
பேசுவது கேட்கவில்லை என்று கூறினால் நம்மையே மிரட்டுகிறாரே என்று கோபமடைந்த தொண்டர்களும், பெண்களும் காலில் போட்டிருந்த செருப்புகளை கழற்றி சரமாரியாக சிரஞ்சீவி மீ்து வீசியடித்தனர். ஏவுகணை போல செருப்புகள் தன் மீது வந்து விழுந்ததால் அதிர்ச்சி அடைந்த சிரஞ்சீவி செருப்புகளைத் தடுக்கப் பார்த்தார். முடியவி்ல்லை. சில செருப்புகள் ஆந்திர முதல்வர் மீதும் வந்து விழுந்தன.
இதையடுத்து பிரசாரம் நிறுத்தப்பட்டது. ஆந்திர முதல்வரும், சிரஞ்சீவியும் அங்கிருந்து தப்பி ஓடாத குறையாக கிளம்பிச் சென்றனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications