அரசு பங்களாவை எனக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டாம்: சச்சின் வேண்டுகோள்
Subscribe to Oneindia Tamil

மாநிலங்களவை எம்.பியாக நியமிக்கப்பட்ட சச்சினுக்கு ராகுல்காந்திக்கு ஒதுக்கப்பட்ட பங்களாவுக்கு எதிரே வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் அரசு ஒதுக்கீடு செய்யும் பங்களா எதுவும் தமக்குத் தேவையில்லை என்றும் அரசுப் பணத்தை வீணடிக்க விரும்பவில்லை என்றும் சச்சின் கூறியுள்ளார். மேலும் டெல்லியில் தமது சொந்த செலவிலெயே ஹோட்டலில் தங்கிக் கொள்வதாகவு அவர் தெரிவித்துள்ளார்.
தம்மை எம்.பி.யாக நியமித்தது கவுரவித்ததே போதும்.. அரசு சலுகைகள் எல்லாம் வேண்டாமே என்றும் அவர் கூறியுள்ளார். நாடாளுமன்ற மாநிலங்களவையின் க்கூட்டத்தில் ஒரு சில நாட்கள்தானே தாம் பங்கேற்கப் போகிறேன் அதற்காக சலுகையெல்லாம் வேண்டாம் என்பதும் சச்சினின் கருத்து.












Click it and Unblock the Notifications