பைக் மீது மோதிய கார் குட்டிக்கரணம் அடித்து குளத்தில் கவிழ்ந்து விபத்து: 4 பேர் பலி
நாகர்கோவில்: நாகர்கோவில் அருகே பைக் மீது மோதிய கார் கட்டுப்பாட்டை இழந்து குளத்தில் கவிழ்ந்ததில் வங்கி ஊழியர் உள்பட நான்கு பேர் இறந்தனர்.
நாகர்கோவில் அருகே உள்ள அருமநல்லூரைச் சேர்ந்தவர் நாகராஜன். அவர் இரணியல் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் பணியாற்றி வந்தார். நேற்று இரவு அவர் தனது நண்பர் வெங்கடாச்சலத்துடன் நாகர்கோவிலுக்கு பைக்கில் வந்து கொண்டிருந்தார்.
அவர்கள் ஈசாந்திமங்கலம் அருகே உள்ள வரகுணமங்கலம் என்ற இடத்தில் வந்த போது எதிரே வந்த கார் ஒன்று பைக் மீது மோதியது. பைக் மீது மோதிய வேகத்தில் கட்டுப்பாட்டை இழந்த கார் குட்டிக்கரணம் அடித்து ரோட்டோர குளத்தில் கவிழ்ந்தது. இரவு நேரம் என்பதால் மீட்பு பணிகள் தாமதமானது. இந்த விபத்தில் வங்கி ஊழியர் நாகராஜன், கார் டிரைவர் சுதாகர், காரில் இருந்த வெங்கடேஷ் உட்பட நான்கு பேர் பரிதாபமாக உயிர் இழந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.